எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 மே, 2022

அகத்திக்கீரை மண்டி

அகத்திக்கீரை மண்டி

 


 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு, அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காகதேங்காய்ப் பால் – 1 கப்சின்ன வெங்காயம் – 10, உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 1, எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும்சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம் தாளித்துப் பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும்அதன் பின் வெங்காயத்தை வதக்கிக் கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும்கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும்இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்

 

வியாழன், 26 மே, 2022

முளைக்கீரை தயிர்க்கூட்டு

முளைக்கீரை தயிர்க்கூட்டு



 

தேவையானவை:- முளைக்கீரைஆய்ந்து கழுவி சுத்தம் செய்தது - 1 கட்டுபாசிப்பருப்பு - 1/4 கப்பெரிய வெங்காயம்பொடியாக அரிந்தது - 1/4 கப்பூண்டு தோலுரித்து நசுக்கியது - 2 பல்சீரகம் - 1 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 1, தண்ணீர் -1/2 டம்ளர்உப்பு - ருசிக்குத் தேவையான அளவுதயிர் – புளிக்காதது அரை கப். எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை:- முளைக்கீரையைக் கழுவிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வைக்கவும்.அதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு., வெங்காயம்., பூண்டுப் பல்., ரெண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்., ஜீரகம்., தண்ணீர் மற்றும் உப்புடன் பிரஷர் பானில் போடவும்இரண்டு விசில் சத்தம் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்பத்து நிமிடங்களுக்குப் பிறகு பிரஷர் பானைத்திறந்து., ஒரு மத்து அல்லது கரண்டியால் மசிக்கவும்தயிரை நன்கு கடைந்து கீரையில் சேர்த்துக் கலக்கவும். வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.

 

ஞாயிறு, 22 மே, 2022

மேத்தி தேப்லா

மேத்தி தேப்லா


 

தேவையானவை:- வெந்தயக் கீரை - 1 கட்டுகோதுமை மாவு - 2 கப்ஓமம் - கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டீஸ்பூன்தயிர் - 2 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்எண்ணெய் - சுட தேவையான அளவு.

 

செய்முறை:- வெந்தயக் கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசையவும்நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைத்து கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துத் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

 


செவ்வாய், 17 மே, 2022

சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்.

 சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ். 



18 . 11. 2021  குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ” சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்”  என்னும் தலைப்பில் எனது 23 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.



இலைகளில் இத்தனை ஐட்டங்களா?

 

1. துளசி ரொட்டி

2. ஆலு மேத்தி

3. மேத்தி தேப்லா

4. முளைக்கீரை தயிர்க்கூட்டு

5. சுக்குடிக்கீரை கழனிச்சாறு

6. அகத்திக்கீரை மண்டி

7. அரைக்கீரை துக்கடா

8. முள்ளுமுருங்கை தோசை

9.முருங்கைக்கீரை அடை

10. தூதுவளை ரசம்

11. வல்லாரை வத்தக்குழம்பு

12. புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்

13. கொத்துமல்லி கட்லெட்

14. புதினா புலவ்

15. கருவேப்பிலைக் காய்ச்சல்

16.பொன்னாங்கண்ணிப் பொரியல்

17. முள்ளங்கிக் கீரை துவட்டல்

18. சேம்பு இலை உசிலி

19. பாலக் பனீர்

20. கடுகுக்கீரை சப்ஜி

21. வெங்காயத்தாள் பச்சடி

22. சோம்பு இலை ரொட்டி

23. கோஸ் சௌமின்

இது நான்காவது குட்டி புக்.

முன்பே 

1. 30 வகை பிரியாணி , குமுதம் சிநேகிதிக்காக.



ஆகியன வெளியாகி உள்ளன.

நன்றி குமுதம் சிநேகிதி. 
 

ஞாயிறு, 15 மே, 2022

சன்னா கட்லெட்

சன்னா கட்லெட்



தேவையானவை:- கறுப்புக் கொண்டைக் கடலை – 1 கப், உருளைக்கிழங்கு – 1, ப்ரெட் – 1 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – அரை இஞ்ச் துண்டு, கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, வெண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ரஸ்க் தூள் – கால் கப், எண்ணெய் – 100 மிலி

செய்முறை:- கறுப்புக் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். 4, 5 விசில் குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துப் போடவும். இதில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, வெண்ணெய், ப்ரெட், மிளகாய்த்தூள் போட்டுப் பிசையவும். கட்லெட்டுகளாகத் தட்டி ரஸ்கில் புரட்டி நான் ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும். 

 

புதன், 11 மே, 2022

பீட்ரூட் பயறு தோசை

பீட்ரூட் பயறு தோசை



தேவையானவை :- பச்சைப் (பாசிப்பயறு - 200 கிராம்., பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., பீட்ரூட் - 1 /8 துண்டு., பச்சை மிளகாய் – 1, பூண்டு - 3 பல்இஞ்சி - 1 இன்ச் துண்டுமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 20 கிராம்.

செய்முறை :-

பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைத்து முளை கட்டவும். மறுநாள் முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் . மெல்லிய தோசைகளாகச் சுட்டு எடுத்துக் கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 8 மே, 2022

பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்

பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்



தேவையானவை:- பச்சைப் பட்டாணி – 1 கப்,பனீர் – 100 கி, பெரிய வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, எண்ணெய் – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- பெரிய வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடியாக அரியவும். பனீரைப் பூப்பூவாக உதிர்த்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்துப் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். இதில் பச்சைப் பட்டாணியைப் போட்டு வதக்கி உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். இரு நிமிடம் வெந்ததும் பனீர் துருவலைச் சேர்த்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

 

வியாழன், 5 மே, 2022

பச்சை அவரை குருமா

பச்சை அவரை குருமா



தேவையானவை:- பச்சை அவரை – 1 கப்பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1, தேங்காய் -  1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் - 3, சோம்பு - அரை டீஸ்பூன்சீரகம் - கால் டீஸ்பூன்மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்இஞ்சி - சிறு துண்டுபூண்டு - 2 பல்கொத்துமல்லித்தழை - சிறிது , கருவேப்பிலை - 1 இணுக்குஉப்பு - அரை டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்பட்டைகிராம்புஏலக்காய் - தலா ஒன்று.

செய்முறை:- வெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கவும்தேங்காய்பச்சை மிளகாய்சோம்புசீரகம்மிளகுபொட்டுக்கடலைஇஞ்சிபூண்டு ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை அவரை , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்ஓரிரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி லேசாகத் திறக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்துப் பச்சை அவரை வெந்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 1 மே, 2022

காலிதால் மாக்னி

காலிதால் மாக்னி



தேவையானவை:- கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப்ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்), பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்., இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்தக்காளி - 2 பொடியாக அரியவும்., பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைசிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-ராஜ்மாவையும் கறுப்பு உளுந்தம் பருப்பையும் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும்ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம்சீரகத்தைத் தாளிக்கவும்சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும்அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளிஉப்புசிவப்பு மிளகாய்த்தூள்மல்லித்தூள்போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் . 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும்நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கிப் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...