எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2016

பின்னி, PINNI.

பின்னி:-


தேவையானவை:- வெள்ளை உருண்டை உளுந்து - 2 கப், வெள்ளை ரவை - கால் கப், கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மாவா ( இனிப்பில்லாத கோவா ) - ஒன்றரை கப், நெய் - ஒன்றரைகப், பால் - அரை கப், சீனி - 2 கப் , பால் - 2 டேபிள் ஸ்பூன் ( கடைசியில் சேர்த்துப் பிசைந்து அச்சு உருண்டை செய்ய ) ,ஊறவைத்துத் தோலுரித்து குச்சியாகப் பொடித்த பாதாம் - கால் கப். சூர்யகாந்தி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன். உடைத்த பிஸ்தா - 1 டீஸ்பூன். ஏலப் பொடி - அரை டீஸ்பூன்.
செய்முறை :-வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது சிறிதாக அரை கப் பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பானில் பாதி நெய்யைக் காயவைத்து ரவையையும் அதன் பின் கோதுமை மாவையும் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை நிதானமான தீயில் வறுக்கவும். இதில் மாவாவைப் போட்டு லேசாகச் சிவந்து வரும்வரை கிளறவும். இதில் அரைத்த உளுந்து விழுதையும் போட்டுக் கிளறவும். நிதானமான தீயில் 30 நிமிடம் கிளறியதும் மாவு உருண்டு வரும்போது மிச்ச நெய்யைச் சேர்க்கவும். தொடர்ந்து கிளற மாவு பொன்னிறமாக உதிர்ந்து நன்கு வாசனை வரத் தொடங்கும். அதில் ஏலப்பொடியையும் சீனியையும் சேர்த்துக் கிளறவும். குச்சியாக நறுக்கிய பாதாமையும் 2 டேபிள் ஸ்பூன் பாலையும் கலந்து நன்கு பிசையவும். இதை சமமாகத் தட்டி வட்ட வட்டமான அச்சுகளினால் வெட்டி எடுத்து மேலே சூரிய காந்தி விதைகளையும் பொடித்த பிஸ்தாவும் தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...