எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 அக்டோபர், 2018

புடலங்காய் கோளா.

புடலங்காய் கோளா.

தேவையானவை :- புடலங்காய் - 1, துவரம் பருப்பு - அரை உழக்கு, பெரிய வெங்காயம் - 1, அரைக்க :- வரமிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து,  - தலா ஒரு டீஸ்பூன். சோம்பு - கால் டீஸ்பூன்.



செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் . புடலையை விதை இல்லாமல் மெல்லிசாக கட்டமாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும்.  ஊறவைத்த பருப்பை நீரைக் களைந்து மிளகாய், சோம்புடன் பெரு பெருவென அரைத்து வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து பெரிய வெங்காயம் புடலையைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். அதில் அரைத்த பருப்பு விழுதையும் போட்டு கிளறவும். சிம்மில் வைத்து மூடி போட்டு அவ்வப்போது கிளறி கால் மணி நேரம் வேகவைத்து உதிரியானதும் இறக்கவும்.  சாம்பார் சாதம், அவியல் சாதம்,  தயிர்சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...