எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 நவம்பர், 2019

14.வரலெட்சுமி விரதம் – எருக்கலங்கொழுக்கட்டை

14.வரலெட்சுமி விரதம் – எருக்கலங்கொழுக்கட்டை

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப் , தேங்காய்த்துருவல் – ஒரு கப், வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஒரு சிட்டிகை உப்பும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்க்கவும். அதில் பச்சரிசி மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் கிளறி மூடி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து மாவை கட்டியில்லாமல் நன்கு பிசைந்து வைக்கவும். தேங்காய்த்துருவலோடு வெல்லம் சேர்த்து வாணலியில் சுருளக் கிளறி ஏலப்பொடி போட்டு வைக்கவும். பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து சொப்புப் போல செய்து தேங்காய்ப் பூரணத்தை வைத்து மேலே கூம்பாக வரும்படி மூடவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...