எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2019

26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி

26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி

தேவையானவை :- சிவப்பரிசி அவல் – 1 கப் மண்டை வெல்லம் – 150 கி, நெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பல் – 2 டீஸ்பூன், முந்திரி – 10. ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.
செய்முறை:- சிவப்பரிசி அவலைக் களைந்து நீரை ஒட்ட வடிக்கவும். வெல்லத்தைத் துருவி சிறிது நீர் சேர்த்துக் கெட்டிப் பாகு வைக்கவும். இதில் ஏலப்பொடியைச் சேர்க்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைக்கவும். அதில் முந்திரியையும் தேங்காய்ப் பல்லையும் வறுத்து அவலைப் போடவும். ( அவல் ரொம்ப ஊறக்கூடாது ) அவலை உதிரி உதிரியாக வறுத்து சூட்டோடு இருக்கும் வெல்லப்பாகில் கொட்டிக் கிளறவும். வெல்லப்பாகு நன்கு சுற்றிலும் பட்டு மொறுமொறுப்பாக அவல் பொரிந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...