எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2021

சாம்பார் பொடி. ( வறுத்தரைக்கும் சாம்பாருக்கு)

சாம்பார் பொடி. ( வறுத்தரைக்கும் சாம்பாருக்கு)




தேவையானவை :- வரமிளகாய் 15, மல்லி - அரை கப், துவரம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுந்து - அரைடீஸ்பூன், பச்சரிசி - அரை டீஸ்பூன், சீரகம், மிளகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

செய்முறை:- வெறும் வாணலியில் முதலில் மிளகாய் பின் பச்சரிசி, மல்லி, சீரகம், வெந்தயம், மிளகு இவற்றை வறுத்து அதன் பின் பருப்புக்களைப் போட்டு லேசாக வாசம் வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும். இவற்றை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு சாம்பார் இறக்கும்போது போடவும். பூசணி, முருங்கை  போன்ற சாம்பார் வைக்கும்போது உப்பு புளி சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க விட்டுத் தாளிக்குமுன் இந்தப் பொடியில் இரண்டுஸ்பூன் போட்டுக் குழம்பை மோந்து கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் தாளித்துக் கொட்டி இறக்கினால் சுவை அமோகமாக இருக்கும். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...