எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2021

22.ப்ராக்கோலி பிரியாணி

22.ப்ராக்கோலி பிரியாணி


தேவையானவை:- ப்ராக்கோலி – 1, பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, சோம்புத்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 கப், உப்பு – 1 டீஸ்பூன், புதினா கொத்துமல்லி – ஒருகைப்பிடி, நெய் + எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் – அரை கப்.ப்ராக்கோலியை வறுக்க :- மைதா, கார்ன்ஃப்ளோர் – தலா 1 டேபிள் ஸ்பூன்.  உப்பு, மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன். வறுக்கத் தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:- ப்ராக்கோலியை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மைதா கார்ன்ஃப்ளோர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பிசறி எண்ணெயில் வறுத்து வைக்கவும். ஒரு ப்ரஷர் குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் +எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காயைத் தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிவக்க வறுத்துத் தக்காளி, சோம்புத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிரியாணி மசாலாவைச் சேர்த்து அரிசியையும் வறுத்து இரண்டு கப் தேங்காய்ப்பால் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கிளறவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும். குக்கரைத் திறந்து ப்ராக்கோலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், புதினா கொத்துமல்லித்தழைகள் தூவி நவரத்ன குருமாவுடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...