மோர்க்களி
தேவையானவை:- அரிசி மாவு - 2 கப், புளித்த மோர் – ½ கப், எண்ணெய் – ¼ கப், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, மோர் மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு- ½ டீஸ்பூன்
செய்முறை :- மோரில் உப்பு சேர்த்து அரிசி மாவைப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளித்து மாவைச் சேர்க்கவும். தண்ணீர் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக