எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 நவம்பர், 2025

உருளைக்கிழங்கு எலுமிச்சை சப்ஜி

உருளைக்கிழங்கு எலுமிச்சை சப்ஜி


தேவையானவை:- உருளைக்கிழங்கு - 2 வேகவைத்துத் தோலுரித்து மசிக்கவும்., பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., பச்சை/சிகப்பு மிளகாய் - 3, 1 இன்ச் துண்டாக நறுக்கவும்., இஞ்சி - 1 இன்ச் துண்டு. பொடியாக நறுக்கவும்., மஞ்சள் பொடி - 1 சிட்டிகை., எலுமிச்சை ரசம் - 1/2 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு,, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை இலை - 1

செய்முறை:- பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் கடலைப்பருப்பு, சோம்பு பட்டை இலை போடவும். இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு . மஞ்சள் தூளும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் வேகவைத்து சப்பாத்தி, நான், புல்காவோடு பரிமாறவும்.

ஞாயிறு, 2 நவம்பர், 2025

அம்ருத் சப்ஜி

அம்ருத் சப்ஜி


தேவையானவை :- கொய்யாப்பழம் – 2, தக்காளி – 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர்/மாங்காய்ப்பொடி – அரை டீஸ்பூன், சீனி – ஒரு சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது.

செய்முறை:- கொய்யாப்பழத்தை நான்காக வெட்டி நடுப்பகுதியில் கொட்டை உள்ள சதையை மட்டும் வழித்தெடுத்துவிட்டுத் துண்டுகள் செய்யவும். கொட்டை உள்ள சதைப்பகுதியை அரைத்து வடிகட்டவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போட்டு அதில் துண்டுகளாக வெட்டிய கொய்யா, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பொடி, சீனி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி கால் கப் தண்ணீர் விட்டு நன்கு மூடி சிம்மில் வேகவிடவும். நான்கு நிமிடம் கழித்து இறக்கி கொத்துமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

மூங்தால் (பாசிப்பயறு) சப்ஜி

மூங்தால் (பாசிப்பயறு) சப்ஜி


தேவையானவை:- பாசிப்பயறு - 1 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், வரமிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன், தனியா தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, கரம் மசாலா பொடி - 1/3 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் கழுவித் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவிடவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி வெங்காய பேஸ்டைப் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கி எல்லாப் பொடிகளையும் போட்டு உப்பு, தக்காளி பேஸ்ட் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி வேகவைத்த பாசிப்பயறைத் தண்ணீருடன் சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு சமைத்துக் கோபி பரோட்டா அல்லது ஆலு பரோட்டாக்களுடன் பரிமாறவும்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

ஆலு கோபி சுக்கா சப்ஜி

ஆலு கோபி சுக்கா சப்ஜி


தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, காலிஃப்ளவர் - 1 சிறியது, எண்ணெய் - 3 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:- உருளையைத் தோலுரித்துக் கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரைப் பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்துப் பூக்களைத் தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்துச் சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.

புதன், 22 அக்டோபர், 2025

ஹரி சன்னா க்ரேவி

ஹரி சன்னா க்ரேவி

தேவையானவை :- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, வெள்ளைப் பூண்டு - 4 பல், இஞ்சி – 2 இன்ச் துண்டு, தக்காளி 1 , சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்,சீரகப் பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச்,, கிராம்பு  - 1, ஏலக்காய் - 1., சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை உரித்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை மைய அரைக்கவும். வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டை வதக்கவும். அது சிவந்ததும் அரைத்த தக்காளி மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்ததும் பச்சைக் கொண்டைக் கடலை, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். இறக்கி பட்டுராவுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...