எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 மார்ச், 2026

புடலங்காய் பொரிச்ச குழம்பு

புடலங்காய் பொரிச்ச குழம்பு


தேவையானவை:- புடலங்காய் -1, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 5, சீரகம் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 2 டேபிள்தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

 

 

செய்முறை:- புடலங்காயை விதை நீக்கிக் கட்டம் கட்டமாக வெட்டவும்சின்னவெங்காயத்தையும் சிறிதாக வெட்டவும்ப்ரஷர் பானில் ஒரு கைப்பிடி பாசிப்பருப்புப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம் , புடலங்காய் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் பச்சை மிளகாய்சீரகம், தேங்காய்த் துருவலை வதக்கி அரைத்து உப்போடு சேர்த்துப் புடலங்காயில் கொட்டி ஒரு கொதி வேகவிடவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

செவ்வாய், 17 மார்ச், 2026

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு


தேவையானவை:- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப், மாங்காய் வற்றல் - 10, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- தட்டைப்பயறை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தைச் சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மில் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும்.

சனி, 14 மார்ச், 2026

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு


தேவையானவை:- மிளகு – அரை டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சரிசி – கால் டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் டேபிள் ஸ்பூன், சின்னவெங்காயம் – 15. உரித்துப் பொடியாக அரியவும். பூண்டு – 10 இதழ் உரித்துப் பொடியாக அரியவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- மிளகு சீரகம், பொட்டுக்கடலை பச்சரிசியைத் தனித்தனியாக கடாயில் போட்டு வெதுப்பிக் கொள்ளவும். இதை மிக்ஸியில்  நன்கு பவுடராகப் பொடித்து வைக்கவும். உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து இந்தப் பொடியைப் போட்டு வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் பூண்டு தக்காளியை சிறுதீயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதில் உப்புப்புளியில் கரைத்த மிளகு விழுதைக் கொட்டி எண்ணெய் பிரியும்வரை வேக வைத்து இறக்கவும்.

புதன், 11 மார்ச், 2026

பூசணிக்காய் மோர்க்குழம்பு

பூசணிக்காய் மோர்க்குழம்பு


தேவையானவை:- பூசணிக்காய் – 1தயிர் – அரை லிட்டர் பாலை உறைய வைக்கவும். , தேங்காய் – பாதி துருவவும்பச்சைமிளகாய் – 4சீரகம் – அரை டீஸ்பூன்துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா 1 டீஸ்பூன் ஊறவைக்கவும்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைஉப்பு – 1 டீஸ்பூன்தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்வெந்தயம் – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- பூசணிக்காயைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத்தில் நீளமாக நறுக்கி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் வதக்கி மஞ்சள் பொடி போட்டு அரை கப் நீரூற்றி வேகவிடவும். தயிரைக் கடைந்து வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பு பச்சரிசியைப் பச்சைமிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலோடு சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பூசணிக்காயில் ஊற்றவும். லேசாக மேலே நுரைத்து வரும்போது உப்பு சேர்த்துக் கடைந்த தயிரை ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

ஞாயிறு, 8 மார்ச், 2026

கருவேப்பிலைக் குழம்பு

கருவேப்பிலைக் குழம்பு


தேவையானவை:- இளம் கருவேப்பிலை - 1 கிண்ணம், சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, தக்காளி - 1, புளி - 1 எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, சோம்பு - 1/2 டீஸ்பூன், ஜீரகம் - 1/4 டீஸ்பூன், மிளகு - 5, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

 

செய்முறை:- கருவேப்பிலையைக் கழுவி அதோடு சோம்பு, சீரகம், மிளகு, மல்லிப் பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, புளி போட்டு நன்கு மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பின் வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போடவும். நன்கு வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றித் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சூடாக சாதம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...