எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அட்சய திரிதியை சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் நிவேதனம். ATCHAYA THRITHIYAI, CHITHRA PAURNAMI RECIPES

ஏப்ரல் 15 - 31, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் இந்த சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

1. கல்கண்டு பால் சாதம்.
தேவையானவை :-
பச்சரிசி - 1 ஆழாக்கு.
பால் - 1 லிட்டர்
உப்பு - 1 சிட்டிகை
கல்கண்டு  -100 கிராம்

செய்முறை:-
பாலைக் காய்ச்சவும். பொங்கி வரும்போது பச்சரிசியைக் களைந்து சேர்க்கவும். கொதி வந்ததும் சிம்மில் வைத்து சாதம் குழையும் வரை வேக விடவும். துடுப்பால் ( மரக் குச்சி ) தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும். குழைந்த சாதத்தில் ஒரு சிட்டிகை உப்பையும் பொடித்த கல்கண்டையும் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவிடவும். நிவேதனம் செய்யவும். இது அட்சய திரிதியை ஸ்பெஷல்

2. டயர் முறுக்கு :-
பச்சரிசி - 4 ஆழாக்கு
வெள்ளை உருண்டை உளுந்து - 1 1/2 ஆழாக்கு
உப்பு - 10 மிலி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

திங்கள், 29 செப்டம்பர், 2014

RICE GHEER, அரிசிப் பாயாசம்,

RICE GHEER, அரிசிப் பாயாசம்,

RICE GHEER :-

NEEDED:-
RICE - 50 KI
MILK - 1 L
SUGAR - 2 TBLSPN
MILK MAID - 1 TBLSPN
FRIED CASHEW, KISMIS - 4 NOS. OPTIONAL
CARDAMOM POWDER - 1 PINCH.

METHOD :-

POWDER THE RICE AND PRESSURE COOK WITH MILK. ADD SUGAR AND KEEP IT IN STOVE TILL IT DISSOLVES. ADD MILK MAID AND REMOVE FROM FIRE. SPRINKLE FRIED CASHEWS, KISMIS AND CARDAMOM POWDER. SERVE HOT OR COOL. 


அரிசிப் பாயாசம். :-

தேவையானவை :-
அரிசி - 50 கி
பால் - 1 லி
சீனி - 2 டேபிள் ஸ்பூன்
மில்க் மெயிட் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி திராக்ஷை - சிறிது நெய்யில் வறுத்தது
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை :-

அரிசியை அரைத்து குக்கரில் பால் ஊற்றி ஒரு சவுண்ட் வேகப்போடவும். எடுத்து நன்கு மசித்து சீனி சேர்த்துக் கொதிக்க விடவும். மில்க்மெயிடைச் சேர்த்து இறக்கி முந்திரி திராக்ஷை போட்டு ஏலப்பொடி தூவவும்.

TIRE MURUKKU . டயர் முறுக்கு.

TIRE MURUKKU:-

NEEDED  :-
RAW RICE - 4 CUPS
WHITE ORID DHAL - 1 1/2 CUPS
SALT - 10 GMS
OIL - FOR FRYING

METHOD:-
WASH AND DRY THE RAW RICE IN A MUSLIN CLOTH. FRY ORID DHAL IN A PAN WITHOUT OIL FOR 2 MINUTES. MIX THE TWO AND GROND WELL IN A MACHINE . SIEVE WELL. DISSOLVE SALT IN A CUP OF WATER AND POUR THIS IN THE FLOUR. MIX WELL ENOUGH WATER AND MAKE A TOUGH DOUGH. POUR A LADDLE OF HOT OIL AND MIX THE DOUGH WELL.PUT THE DOUGH IN TIRE MURUKKU ACHU AND PRESS IT ABOVE THE HOT OIL IN TAWA. FRY TILL THE OIL STOPS BUZZING AND REMOVE FROM HEAT & SERVE HOT.

டயர் முறுக்கு :-

தேவையானவை:-
பச்சரிசி - 4 ஆழாக்கு
வெள்ளை உருண்டை உளுந்து - 1 1/2 ஆழாக்கு
உப்பு - 10 கி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-
பச்சரிசியைக் களைந்து நிழற்காய்ச்சலாகக் காயப் போடவும். வெள்ளை உருண்டை உளுந்தை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வெதுப்பவும். இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து சலித்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பைக் கரைத்துச் சேர்த்து மாவு பிசையவும். எண்ணெயைக் காய வைத்து அதிலிருந்து ஒரு கரண்டி ஊற்றி நன்கு மாவை மென்மையாகப் பிசையவும். டயர் முறுக்கு அச்சைக் குழலில் வைத்து மாவை நிரப்பிப் பிழிந்து எண்ணெயில் வெண்ணிறமாக சுட்டு எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்மையாக வரும்

HOME MADE GULAB JAMOON, குலோப் ஜாமூன்

GULAB JAMOON, குலோப் ஜாமூன்:-

NEEDED:-
MILK POWDER - 200 GMS
MAIDA - 2 TBLSPN
CURD - 2 TBLSPB
GHEE - 1 TSP
SUGAR - 2 CUPS
WATER - 2 CUPS
SODA BI CARBONATE - A PINCH
OIL - FOR FRYING

METHOD:-

MAKE A SOFT DOUGH WITH MILK POWDER, MAIDA, CURD, GHEE AND SODA BI CARBONATE. FORM INTO SMALL BALLS. FRY OVER LOW HEAT TILL GOLDEN BROWN. 

MIX SUGAR AND WATER . LET IT BOIL TILL IT IS OF ONE THREAD CONSISTENCY. KEEP IT WARM.  ADD THE JAMOONS AND MARINATE THEM FOR 15 MINUTES AND SERVE HOT.

குலோப் ஜாமூன்:-

தேவையானவை:-
பால் பவுடர் - 200 கி
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
சீனி - 2 கப்
தண்ணீர் - 2 கப்
சோடா பை கார்பனேட் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
பால் பவுடர், மைதா, தயிர் நெய் சேர்த்து  மென்மையாகப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

ஜீனியையும் தண்ணீரையும் சேர்த்து பாகு காய்ச்சவும். 2 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் இறக்கவும். வெதுவெதுப்பான பாகில் ஜாமூன்களைச் சேர்த்து 15 நிமிடம் ஊறவைத்துப் பரிமாறவும்.

சனி, 27 செப்டம்பர், 2014

BITTERGOURD COWPEAS PITLAI. பாகற்காய் தட்டைப்பயறு பிட்ளை.

BITTERGOURD COWPEAS PITLAI:-

NEEDED :-
BITTERGOURD - 250 GMS
COW PEAS - 50 GMS
THUVAR DHAL - 1 TBLSPN .
SMALL ONION - 8 NOS
TOMATO - 1 NO.
RED CHILLIES - 6 NOS
CORIANDER - 1 TBLSPN
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
JEERA - 1/4 TSP
FENUGREEK - 1/4 TSP
PEPPER - 10
GRATED COCONUT -  1 TBLSPN
TUMERIC - 1 PINCH
TAMARIND - 1 LEMON SIZE BALL.
SALT - 1 TSP
OIL - 1 TBLSPN
MUSTARD -  1/2 TSP
ORID DHAL - 1/2 TSP
JEERA - 1/4 TSP
ASAFOETIDA - 1 PINCH
CURRY LEAVES.- 1 ARK

METHOD :-

WASH, CLEAN AND REMOVE THE SEEDS AND SLICE THE BITTERGOURD. PEEL AND CUT THE SMALL ONION AND TOMATO. WASH AND PRESSURE COOK THUVAR DHAL AND COWPEAS WITH ENOUH WATER.

IMMERSE THE TAMARIND IN 2 CUPS OF WATER AND SQUEEZE TO TAKE THE PULP. ADD SALT AND KEEP ASIDE.

SAUTE THE BITTERGOURD IN LITTLE OIL AND POUR SOME WATER AND COOK FOR SOMETIME. KEEP ASIDE.

IN 1 TSP OIL SAUTE THE RED CHILLIES, CORIANDER, ORID DHAL, CHANNA DHAL,JEERA, FENUGREEK, PEPPER AND LASTLY ADD THE GRATED COCONUT AND SAUTE FOR SOMETIME. GRIND WELL WITH ENOUGH WATER.

HEAT OIL IN A PAN ADD THE MUSTARD. AND WHEN IT SPLUTTERS ADD ASAFOETIDA, ORID DHAL, JEERA, CURRY LEAVES, SMALL ONIONS, TOMATO, SAUTE WELL. ADD THE PARA COOKED BITTERGOURD WITH THUVAR DHAL AND COWPEAS. MIX WELL.

ADD THE TAMARIND PULP AND THE GROUND MASALA. MIX WELL ALLOW IT TO BOIL FOR 5 MINUTES. REMOVE FROM HEAT AND SERVE HOT WITH RICE AND PAPAD.


பாகற்காய் தட்டைப்பயிறு பிட்ளை:-

தேவையானவை. :-
பாகற்காய்  - 250 கி
தட்டைப்பயறு / காராமணி - 50 கி
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
வரமிளகாய் - 6
வர மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 14 டீஸ்பூன்
மிளகு - 10
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு.


பாகற்காய்களைக் கழுவி விதை நீக்கி வட்ட வட்டமாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியையும் துண்டுகளாக்கவும்.ப்ரஷர் பானில் துவரம் பருப்பையும், தட்டைப் பயறையும் கழுவிப் போட்டு போதிய நீர் ஊற்றி வேக விடவும்.

புளியை 2 கப் தண்ணீரில் ஊறப்போட்டு சாறு எடுத்து உப்பு சேர்த்து வைக்கவும்.

பாகற்காயை சிறிது எண்ணெயில் வதக்கி  தண்ணீர் சிறிது சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மிளகாய், மல்லி , உளுந்தம்பருப்பு , கடலைப்பருப்பு, சீரகம் வெந்தயம் மிளகு வறுத்து துருவிய தேங்காயையும் போட்டு வறுத்து ஆறியவுடன் லேசாகத் தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சீரகம் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பதமாய் வேக வைத்த  பாகற்காய், வேகவைத்த  துவரம் பருப்பு, தட்டைப் பயறைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும்

புளித்தண்ணீரையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி சூடான சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

கிச்சன் கில்லாடி:-



கிச்சன் கில்லாடி:-

சமைக்கிறது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை. அது மிக மிக எளிமையான ஒரு ப்ராக்டிகல்தான். ஒரு சில தியரிகளை ..ஒரு சில டிப்ஸ்களைப் பின்பற்றினால் நீங்களும் கிச்சன் கில்லாடிதான்.

1.ப்ளெயின் பொரியல் :- எல்லாக் காய்கறிகளையும் ஆவியில் வேகவைத்துவிட்டுப் பொரித்தால் நிறம் மணம் சுவை மாறாது. அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு உளுந்து வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து உப்பு, தேங்காய் போட்டுக் கலக்கி …. படாஃபட் இறக்கவேண்டியதுதான்.

2. காரப் பொரியல் :- உருளை, வாழை, வெண்டி, கத்திரி இவற்றை கடுகு உளுந்து தாளித்து ( பிடித்தால் சோம்பு போடலாம் ) இரண்டு நிமிடம் வதக்கி உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்து சிம்மில் போட்டு 5 – 7 நிமிடம் கிளறி இறக்க வேண்டியதுதான். சேனை, சேம்பு போன்றவற்றை வேகவைத்து இதே முறையில் செய்யணும்.

3. ஃப்ரூட் சாலட்களில் ஜீனிக்கு பதிலாக தேனும் பேரீச்சையும் உபயோகிக்க வேண்டும்.

4. குளிர்காலத்தில் ஒரு ரசம் நல்லது. தூதுவளை, பைனாப்பிள், வெற்றிலை, கற்பூரவல்லி இலை, துளசி, இளநீர், ரோஜாப்பூ, வேப்பம்பூ ஆகியவற்றில் ரசம் வைக்கலாம்.

5. ஆப்பிள் பைனாப்பிள், தக்காளி, கோளா உருண்டை ஆகியவற்றிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.

6. தீயை மிதமாகவே வைத்து சமைப்பது நல்லது ( பாத்திரம் கழுவுபவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான் . ;)  ஃப்ரைட் ரைஸ் செய்யும்போதுதான் தீயை ஹை ஃப்ளேமில் வைக்கணும்.

7. கொத்துமல்லி, புதினா, கொழுந்து கருவேப்பிலை உபயோகித்து வெரைட்டி தோசைகளும், வெரைட்டி ரைஸஸும் செய்யலாம்.

8. ஆலிவ் ஆயிலை சாலட், நூடுல்ஸ் போன்றவற்றில் ஸ்ப்ரே செய்துதான் உபயோகிக்கணும். சூடுபடுத்தக் கூடாது.

9. அரிசி களைந்த தண்ணீரில் மணத்தக்காளி/பொன்னாங்கண்ணிக்கீரை சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் வாய்ப்புண் ஆறும்.

10. கடுகு உளுந்து எண்ணெயில் தாளித்து ஒரு பாட்டிலிலும், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, மஞ்சப் பொடி பாக்கெட்டுகளிலும் புளி உப்பு சிறிதும் அரிசி கொஞ்சமும் ஒரு குட்டி ரைஸ் குக்கரும் டூர் போகும் ஊர்களுக்குக் கொண்டு சென்றால் விருந்தே சாப்பிட்டு விடலாம். ஒரு 3 கப் டிபன் டப்பா இருந்தால் நலம்.

ரைஸ் குக்கரில் தண்ணீர் ஊற்றி தேவையான காய்கறிகளை வேகப்போட்டு முக்கால் பதம் வெந்ததும் உப்பு மிளகாய்ப் பொடி போட்டு இரு நிமிடம் கழித்து கடுகு உளுந்து எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக் கிளறி இறக்கினால் காரப் பொரியல் ரெடி.

வெங்காயம் தக்காளி, பூண்டு காய்களைக் கட் செய்து உப்புப் புளித் தண்ணீரில் போட்டு ( சீரகம், துண்டு பெருங்காயம் இருந்தால் பச்சையாகப்போடலாம் ) சாம்பார் பொடி போட்டுக் பத்து நிமிடம் கொதித்ததும் கடுகு உளுந்து எண்ணெயை ஒரு ஸ்பூன் விட்டு இறக்கினால் குழம்பு ரெடி.

பாசிப்பருப்பு சீரகம் காய் அல்லது கீரையை உப்புப் போட்டு வேகவைத்து இறக்கினால் கூட்டு ரெடி.

சாதம் வைத்து சிப்ஸ், தயிர் வாங்கி ஜமாய்க்க வேண்டியதுதான். போற ஊர்ல எல்லாம் சமைக்க முடியுமா என்று கேக்கிறீங்களா.. வயிறு ரொம்பப் படுத்தினா என்ன செய்றது. வெளிய விக்கிற சோறு ஒத்துக்காட்டா அவதிப்படப் போறது நாமதானே.

என் ஃப்ரெண்ட் குடும்பம் ஒருத்தங்க வெளிநாட்டு டூருக்கே ரைஸ் குக்கரோட போனாங்க. ஆனா என்ன யோகர்ட் வாங்கி பிக்கிள்ஸ் அல்லது சாலட்டோட சாப்பிட்டாங்களாம். 

சில ஹோட்டல்களில் மினி ஃப்ரிட்ஜ் இருக்கும். வீட்டிலிருந்து தக்காளித் தொக்கு, கருவேப்பிலைக் குழம்பு, புளிக்காய்ச்சல் எடுத்துட்டுப் போனா அதுல வைச்சு சாப்பிடும்போது தண்ணீல சூடு பண்ணி 3 நாளைக்கு சமாளிக்கலாம். 

ஒரு வாய் சோறு சாப்பிடாட்டா நமக்கு என்னவோ போலிருக்கும்தானே. அதுனால நார்த் இண்டியா போறதுன்னா எது எடுத்துக்கிறமோ இல்லையோ ஒரு குட்டி எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் கொஞ்சம் அரிசியும் எடுத்துட்டுப் போயிடுறது வழக்கம். காலையிலயும் நைட்லயும் சப்பாத்தி சாப்பிட்ட வாய்க்கு தயிரும் ஊறுகாயுமே அமிர்தமா இருக்கும் . ட்ரை பண்ணிப்பாருங்க. J

திங்கள், 22 செப்டம்பர், 2014

புத்தாண்டு, ராமநவமி, பங்குனி உத்திரம் நிவேதனக் குறிப்புகள் NEW YEAR & RAMANAVAMI RECIPES.

இந்த நிவேதனக் குறிப்புகள் ஏப்ரல் 1- 15,   2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1. பாற்சோறு.:-
*************************

தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
வெல்லம்+கருப்பட்டி - 2 கப்
தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்.
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும்.
2. மதுவரக்கம்.:-

வியாழன், 18 செப்டம்பர், 2014

குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் . ( 30 விதமான சமையல் குறிப்புகள். ) CHETTINAD SPECIAL RECIPES.



செட்டிநாட்டு உணவுகளின் முக்கியத்துவம்:-
செட்டிநாடு என்றாலே கட்டுக் கோப்பான வீடுகளுக்கு அடுத்தபடியாக அவர்களின் விருந்தோம்பல்தான் ஞாபகம் வரும். செட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை.

 வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே  மிகச் சிறப்பான சமையலைச் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பு. மிகக் குறைவான பொருட்களே தேவை. சிறிது எண்ணெய் மட்டுமே அதிகம் சேர்ப்பார்கள். செட்டிநாட்டு உணவுகளில் மசாலை என்பது சிறப்பு. அம்மியில் மிளகாய் சோம்பு அரைத்துச் செய்வார்கள். கிட்டத்தட்ட தினமும் ஒரு மசாலை  இருக்கும்.

ஒரு நாள் சமையலிலேயே பொருத்தமாக சமைப்பார்கள். சாம்பார் என்றால் மசாலை, பிரட்டல், மண்டி, வடை , துவையல் போன்ற பக்க பதார்த்தங்களும், கெட்டிக் குழம்பு என்றால் பொரியல், துவட்டல் போன்ற பக்க பதார்த்தங்களும் ( வெஞ்சனங்களும் ) சூப்பு, இளங்குழம்பு என்றால் காரமான பக்கபதார்த்தங்களும் செய்வார்கள்.

ஒன்றில் தேங்காய் போட்டால் இன்னொன்றில் பருப்பு போடுவார்கள். இன்னொன்றைக் காரமாக சமைப்பார்கள். காய்கறி தோதுபார்த்துத்தான் தொட்டுக்கொள்ள வைப்பார்கள்.

அவள் விகடனில் பொங்கப் பானையும் கொப்பி கொட்டுதலும்.PONGAL AT AVAL VIKATAN

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-

திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.

பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு சாமி வீட்டில் அம்மா நடுவீட்டுக் கோலமிடுவார்கள். அன்று மாலை பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், கிஸ்மிஸு, கத்திரிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய், அவரைக்காய், பலாக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, கரும்புக்கட்டு, மஞ்சக் கொத்து , வாழை இலை வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் எல்லாம் எடுத்து எங்கள் ஆயா வீட்டு ஐயாவும் மாமாக்களும் வருவார்கள்.

பொதுவாக பொங்கல் பானை விளக்கு வைத்தபின் கொடுப்பதில்லை என்பதால் அது ஒரு மாலைப் பொழுதிலேயே பொங்கல் பானை எடுத்து வருவார்கள். அம்மா சாமி வீட்டில் விளக்கேற்ற நடுவீட்டுக் கோலத்தின் முன்பு கொண்டுவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை வைத்து ஐயாவும், மாமாக்களும் வணங்கி வருவார்கள்.

பொங்கல் பானை கொண்டு வந்தவர்களுக்குச் சிறப்பான மாலைப் பலகாரத்தை அம்மா செய்திருப்பார்கள். கந்தரப்பம், வடை, காரட் அல்வா, பாதாம் அல்வா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், வறுத்த முந்திரிப் பருப்பு, மிக்ஸர் இதில் இனிப்பு ஒன்றும் காரம் ஒன்றும் அத்துடன் இட்லி, தோசை அல்லது மினி ஊத்தப்பம். வெங்காயக் கோஸ்/அவியல்/கோசமல்லி இவற்றோடு இருக்கும்.

பொங்கலுக்கு முதல்நாள் திரும்ப சாமி வீடு மெழுகி அம்மா நடுவீட்டுக் கோலம் போடுவார்கள். பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கரைத்து காட்டன் துணியில் தொட்டு இந்தக் கோலத்தைப் போடுவோம். சாமிவீட்டின் வாசல்படிகளில் கோலமிட்டு சாமிவீட்டுக்கு நேரே வெளிப்பத்தியில் அல்லது கீழ் வாசலில் கிழக்கே சூரியன் உதிக்கும் திசை பார்த்துப் பொங்கலிடக் கோலம் போடுவோம். இதில் செவ்வகக் கோலத்துள் அடுப்பு வைக்க மனைகள் போட்டு தேர்க் கோபுரம்  மற்றும் கால்கள் போட்டு இரட்டை வரிசைப் புள்ளிகள் குத்துவோம். முதலில் கோலம் போட்டுப் பழகுபவர்களுக்குப் புள்ளி வைக்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள்.

புதன், 17 செப்டம்பர், 2014

நவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES

நவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில்.

1. கவுனரிசி:-

தேவையானவை:-
கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை:-
கவுனரிசியை சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும். வெளியில் எடுத்து நன்கு மசிக்கவும். சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.


2. சிவப்பரிசிப் பணியாரம்.

தேவையானவை :-
சிவப்பரிசி - 2 ஆழாக்கு தலை தட்டி
உளுந்து அதன் மேல் கோபுரமாக வைக்கவேண்டும்.
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

கீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில். GREENS

கீரை வெரைட்டீஸ்.. புதிய தரிசனத்தில்.

கீரை வெரைட்டீஸ்..:-
*****************************

கீரை சாப்பிடணும்னா ஓடுறவரா நீங்க.. இந்த கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்லுவீங்க..

நமக்கு இயற்கையிலேயே கீரைகள்ல அதிக சத்து கிடைக்குது. விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் குரோமியம் உப்பு , அப்புறம் இரும்புச் சத்தும் கிடைக்குது. குழந்தைகளுக்கு தினம் கீரை கொடுப்பது நல்லது. ஒரே மாதிரி பொரியல் கூட்டு வைக்காமல் வெரைட்டியாக செய்யலாம்.  அதுக்குன்னு கீரை போண்டா., கீரை கட்லெட். கீரை வடைன்னு எண்ணெயில குளிச்சு எந்திரிக்காம. சத்துள்ள அதே சமயம் சுவையான கீரை சமையல்கள் பத்திப் பார்ப்போம்.

முதலில் கருவேப்பிலைக் குழம்பு, கருவேப்பிலை கீரை வகைதான் அதை நிறைய உணவுல சேர்த்துக்குறதுநல்லது. தாளிக்க உபயோப்படுத்தி தூக்கி எறிஞ்சிடுவோம் நாம் அப்படி இல்லாம கருவேப்பிலை உப்பு., புளி ., மிளகாய்., சோம்பு வைத்து அரைத்து. எண்ணெயில் கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம்., பூண்டு ., தக்காளி சேர்த்து., அரைத்த மசாலாவை ஊற்றி எண்ணெய் பிரியும்வரை அடுப்பில் சிம்மில் வைத்து இறக்கி சூடான சாததோடு சாப்பிட்டால் தேவாமிர்தம்தான்.

அடுத்து கொத்துமல்லி தோசை. கொத்துமல்லியில் என்னன்னவோ சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு கைப்பிடி ஆய்ந்து பொடியா நறுக்கி தோசையில் போட்டு திருப்பிப் போட்டு சாப்பிட்டு பாருங்க ப்ளெயின் தோசையே சாப்பிட மாட்டீங்க.

வியாழன், 11 செப்டம்பர், 2014

குமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.RECIPES FOR SENIOR CITIZEN

1. கொடிப்பசலைக்கீரை மசியல்:-
==========================
தேவையானவை..:-
1.கொடிப்பசலைக் கீரை.. ஆய்ந்து கழுவி சுத்தம் செய்தது..:-1 கட்டு
2. பாசிப்பருப்பு:- 1/4 கப்
3. பெரிய வெங்காயம்..:பொடியாக அரிந்தது :- 1/4 கப்
4. பூண்டு தோலுரித்து நசுக்கியது ..:- 2 பல்
5. சீரகம் :- 1 டீஸ்பூன்
6. பச்சை மிளகாய்..:- 1
7. தண்ணீர் :-1/2 டம்ளர்
8. உப்பு:- ருசிக்குத் தேவையான அளவு.

செய்முறை:-
1 . கீரையை பொடியாக நறுக்கி பாசிப்பருப்பு., வெங்காயம்., பூண்டுப் பல்., ரெண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்., ஜீரகம்., தண்ணீர் மற்றும் உப்புடன் பிரஷர் பானில் போடவும்..
2. இரண்டு விசில் சத்தம் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
3. பத்து நிமிடங்களுக்குப் பிறகு பானைத்திறந்து., ஒரு மத்து அல்லது கரண்டியால் மசிக்கவும்.. சாதத்தில் நெய்யும் கீரையும் போட்டு சாப்பிடலாம் அல்லது வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்..

2. காரட் பீன்ஸ் பொரியல்:-
தேவையானவை :-
காரட் - ஒன்று
பீன்ஸ் - 10
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

செய்முறை :-
காரட்டை தோல்சீவி., பீன்ஸையும் காம்பு நறுக்கி கழுவி சதுரங்களாக வெட்டவும்..
அரைவேக்காடாக (ஒரு சவுண்ட் வரும் வரை பிரஷர் பானில் அல்லது மைக்ரோ வேவில்) வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்களை சேர்க்கவும்..
உப்பு தூவி இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்
இது பூண்டு குழம்பு சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏற்றது..

3. இளந்தோசை :-
தேவையானவை :-
இட்லி அரிசி
(வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்

திங்கள், 8 செப்டம்பர், 2014

பலகாரம் பதினொண்ணு இவள் புதியவளில். SNACKS

பலகாரம் பதினொண்ணு

சமையலுக்காக ஒரு வலைத்தளம்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதன் ஐடி    http://thenoos.blogspot.in . இதை க்ளிக் செய்தால் எல்லாப்  பலகாரங்களின் படங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு பலகாரத் தலைப்பின் கீழும் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன்.  செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

1. இலை அடை :-
****************************

http://thenoos.blogspot.com/2010/09/ilai-adai.html
 

தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)

செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.

2. வெஜிடபிள் தூள் பஜ்ஜி:-
***************************************
http://thenoos.blogspot.com/2010/09/veg-thuul-bajji.html  

தூள் பஜ்ஜி:-

தேவையானவை :-
கடலை மாவு - 100 கிராம்.
மைதா - 20 கிராம்
சோளமாவு - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க..
கலவைக் காய்கள் - 1 கப் (மெல்லிய குச்சிகள்) ( கத்திரி., வாழை., உருளை இங்கு உபயோகித்து இருக்கோம்) விரும்பினால்.. வெண்டை., காரட் ., பீன்ஸ் சேர்க்கலாம்..

செய்முறை :-
கடலை மாவு., மைதா., சோள மாவு ., உப்பு ., பெருங்காயப் பொடி., மிளகாய்த்தூள்., ரெட் ஃபுட் கலர்., கலவைக் காய்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசையவும்.. தண்ணீர் விட வேண்டாம்.. காய்களில் உள்ள தண்ணீர்ச் சத்தே போதும். பானில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கை நிறைய மாவை எடுத்து உதிர்த்தது போல் தூவிவிடவும்.. நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சாஸ்கள் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

3. கல்கண்டு வடை :-
*******************************

http://thenoos.blogspot.com/2010/11/kalkandu-vadai.html 

தேவையானவை:-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

4. பீட்ரூட் வடை:-
**************************
http://thenoos.blogspot.com/2011/01/beetroot-vadai.html 

தேவையானவை :-
பீட்ரூட் - 2 ( தோல் சீவி துருவியது).
துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பத்துவிதப் பொங்கல். இவள் புதியவளில். 10 TYPES OF PONGAL

பத்துவிதப் பொங்கல்..

பொங்கல்:-
*******************
1. சர்க்கரைப் பொங்கல்

2. அக்கார வடிசல்

3. கல்கண்டுப் பொங்கல்

4. பாற்சோறு.

 5. மாம்பழப் பொங்கல்

6. அன்னாசிப் பொங்கல்

7. வெண்பொங்கல்

8. தக்காளிப் பொங்கல்

9. காய்கறி வெள்ளைரவைப் பொங்கல்

10. கோதுமைரவைப் பொங்கல்.

***************************************************

1. சர்க்கரைப் பொங்கல்:-
**********************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராஷை - 10
பால் - 1/2 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை களைந்து குக்கரில் 2 கப் தண்ணீரில் 2 விசில் சவுண்ட் வரும்வரை வேகவிடவும். இறக்கி பாலை சேர்த்து மசிக்கவும். வெல்லத்தை பாகு காச்சி வடிகட்டி பொங்கலில் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் முந்திரி திராஷையை வறுத்து ஏலப்பொடியை சேர்த்து பொங்கலில் கொட்டி கிளறி பரிமாறவும்.

2. அக்கார வடிசல்:-
*******************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கைப்பிடி
பால் - 6 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
திராஷை - 10.
பேரீச்சை - 2 ( விரும்பினால் சேர்க்கலாம்)
கிராம்பு - 2
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை.
ஏலப்பொடி - 1 சிட்டிகை.

Related Posts Plugin for WordPress, Blogger...