எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நவராத்திரி ரெசிப்பீஸ். NAVRATHRI RECIPES.

1.காராமணி இனிப்பு சுண்டல்
2.சோளே சுண்டல்
3.ஸ்வீட் கார்ன் சாட்
4.முளைவிட்ட பயறு டாகோஸ்
5.பச்சை வேர்க்கடலை சுண்டல்
6.பச்சை பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.
7.ப்ரவுன் மொச்சை சுண்டல்
8.கொள்ளு சுண்டல்
9.நவதானிய மிக்ஸர்.
10.நவதானியப் பாயாசம்
11.எலுமிச்சை சாதம்.
12.பச்சை அவரை சுண்டல்.
13.எள்ளு சாதம்
14.சோயா சுண்டல்.
15.பகாளாபாத்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் - SPECIAL RECIPES FOR SAINTS.



மகான்கள் ரெசிப்பீஸ்.

1.மாம்பழ கேசரி.
2.பொட்டுக்கடலை மாவுருண்டை
3.நீர் தோசை.
4.பாசிப்பயறு கொழுக்கட்டை
5.காபூலி சன்னா காய்கறி சுண்டல்
6.சாமைீரப் பொங்கல்.
7.பரங்கிப்பிஞ்சுத் துவட்டல்
8.மாதுளங்காய் தயிர்ப்பச்சடி
9.பப்பாளிக்காய் மிளகுப் பொரியல்.
10.ஜவ்வரிசிப் பருப்புப் பாயாசம்

1.மாம்பழ கேசரி :-

தேவையானவை:- வெள்ளை ரவை – 1 கப், நெய் – முக்கால் கப், சர்க்கரை- 2 கப், மாம்பழம் – 1, மாங்கோ எஸன்ஸ் – சில துளிகள், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.

செய்முறை:- வெள்ளை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து வைக்கவும்.மாம்பழத்தைத் தோல் சீவி ஒரு பகுதியை சிறு துண்டுகளாகச் செய்து மீதியை மசித்து வைக்கவும். ரவையில் இரண்டு கப் கொதிநீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்து ஒட்டாமல் வேகும்போது நெய்யை ஊற்றவும். மாம்பழச் சாற்றையும் ஊற்றி இறக்கப் போகும் முன் மாம்பழத் துண்டுகள், முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலந்து எஸன்ஸ் ஊற்றி நன்கு கலக்கி நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும். நிவேதிக்கவும்.  

2.பொட்டுக்கடலை மாவுருண்டை

தேவையானவை:- பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும். நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...