எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

27.சிந்தி மட்டன் பிரியாணி

27.சிந்தி மட்டன் பிரியாணி


தேவையானவை:- மட்டனை ஊறவைக்க :- மட்டன் தொடைக்கறி - அரைக்கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், சிவப்புமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். உப்பு – ஒரு டீஸ்பூன்

பிரியாணி செய்ய :- ஒரு கிலோ பாசுமதி அரிசி, எண்ணெய் – அரை கப், பெரிய வெங்காயம் – 6, தக்காளி – 4, உருளைக்கிழங்கு – 4, ப்ரூன்ஸ் ( காய்ந்த ப்ளம்ஸ்) – 10 , பச்சை மிளகாய் – 4, யோகர்ட் – 1 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கிராம்பு – 4, பச்சை ஏலக்காய் – 2 கறுப்பு ஏலக்காய் – 2, மிளகு – 5, சீரகம் – 2 டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, பிரிஞ்சி இலை – 2, புதினா கொத்துமல்லி – 4 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ – 1 டீஸ்பூன், யெல்லோ ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- மட்டனை ஊறவைக்கத் தேவையானவற்றைக் கலந்து மட்டனை  2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். உருளைக்கிழங்கைத் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும். அரை கப் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். பாதியை அலங்கரிக்க எடுத்துக் கொண்டு மீதியில் சீரகம் ஏலக்காய், மிளகு, கிராம்பு போட்டுத் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்டைச் சேர்க்கவும். அதன் பின் மிளகாய்ப் பொடி, உப்பு, மஞ்சள் தூளுடன்  வெந்நீரில் ஊறவைத்த ப்ரூன்ஸையும் நறுக்கிய தக்காளியையும் சேர்க்கவும். தக்காளி குழைந்ததும் பச்சை மிளகாய், ஊறவைத்த மட்டனைச் சேர்க்கவும். ஓரளவு மட்டன் வெந்ததும் யோகர்ட், வெந்நீரில் ஊறவைத்த குங்குமப்பூவைச் சேர்க்கவும். மட்டன் நன்கு வெந்ததும் பொரித்த உருளைக்கிழங்கு கரம் மசாலாவைச் சேர்க்கவும். ஒரு பெரிய பானில் தண்ணீரைக் கொதிக்க வைத்து 2 டேபிள் ஸ்பூன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து முக்கால் பதம் சமைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு இன்னொரு பெரிய தேக்ஸாவில் சாதம், மட்டன் & உருளைக் கறி, வறுத்த வெங்காயம், பொடியாக அரிந்த கொத்துமல்லி புதினாத்தழைகள் போட்டு யெல்லோ ஃபுட் கலரை நீரில் கலந்து தெளிக்கவும். இறுக்கமான மூடி போட்டு மூடி 15 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடனும் வெங்காயம் தக்காளி கச்சும்பாருடனும் ( சாலட்)  பரிமாறவும்.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...