எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 டிசம்பர், 2014

மார்கழி நிவேதனங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் RECIPES FOR DECEMBER

இவை டிசம்பர் 1 - 15, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

திருவாதிரைக் களி:-

தேவையானவை :-
பச்சரிசி – 1 கப் கழுவி காயவைத்து ரவையாகப் பொடிக்கவும்.
பாசிப்பருப்பு – ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பு - ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்
வெல்லம் – 200 கி
தேங்காய் – 1 மூடி துருவவும்
நெய் – 30 கி
முந்திரி – 5 இரண்டாக ஒடிக்கவும்.
கிஸ்மிஸ் – 10
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:-
3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் அரிசி பருப்பு ரவைகளைத் தூவிக்கொண்டே கிளறவும். உப்பும்,10 கிராம் நெய்யும் ஊற்றவும். கட்டி படாமல் கிளறி ப்ரஷர் பானில் போட்டு ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டுக் களியில் கொட்டி ஏலப்பொடி தூவி மிச்ச நெய்யையும் ஊற்றிக் கிளறி நைவேத்தியம் செய்யவும்.

2. திருவரங்கத்து நெய் அப்பம் :-

தேவையானவை :-
கோதுமை மாவு – 2 கப்
தூள் வெல்லம் – 3/4 கப்
நெய் – பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:-
ஒரு பேசினில் கோதுமை மாவைப் போட்டு வெல்லத்தைக் கலந்து லேசாகத் தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு போல இறுக்கமாகப் பிசையவும். நெய்யைத் தொட்டுக் கொண்டு கையால் சின்ன சைஸ் ரொட்டி போலத் தட்டி நெய்யைக் காயவைத்துப் பொரித்து எடுத்து நிவேதிக்கவும்.


3.தவலை வடை:-

தேவையானவை:-
பச்சரிசி - 50 கிராம்
புழுங்கரிசி - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம்
வர மிளகாய் - 4
சோம்பு ( பெருஞ்சீரகம்) - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

அரிசி பருப்புக்களை நன்கு கழுவி ஊறவைக்கவும். மிளகாய் , சோம்பு, உப்பை பொடியாக்கவும். அத்துடன் அரிசி பருப்பு ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும். ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டுப் பிரட்டி அரைத்த மாவில் கொட்டி நன்கு கலக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு சின்ன குழிவான கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னி அல்லது கதம்பச் சட்னியுடன் சுடச் சுடப் பரிமாறவும்.


4.சீரக கொழுக்கட்டை:-
தேவையானவை :-
புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/3 டீஸ்பூன்
வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை:-
சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிண்டினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.)

10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

5.காரட் போளி:-
தேவையானவை:-
மைதா - 2 கப்
காரட் – 3 (பெரிது ) தோல்சீவி துருவவும்.
ஜீனி - 1/2கப்
பால் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 கி
உப்பு - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன் ( விரும்பினால்)
மைதா - 1 டேபிள் ஸ்பூன் தூவ

செய்முறை:-
மைதாவை சலித்து உப்பு, மஞ்சள் பொடி, பேக்கிங் பவுடரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மென்மையான மாவாக பிசையவும். 16 சம பாகங்களாகப் பிரித்து உருட்டவும். ஒரு பவுலில் அடுக்கி எண்ணெயை ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

காரட்டை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி லேசாக பால் ஊற்றி ஜீனியைப் போடவும். ஜீனி கரைந்ததும் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கவும்.. இந்த பூரணத்தை எடுத்து 16 சமபாகங்களாகப் பிரித்து உருட்டி வைக்கவும்.

மைதா உருண்டைகளைக் கிண்ணங்களாகச் செய்து பூரணத்தை வைத்து மூடவும். மைதா மாவில் தொட்டு சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லைக் காயவைத்து நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து சூடாக போளிகளைப் பரிமாறவும்.

6.கார்ன் ஃப்ளேக்ஸ் அவல் மிக்ஸர்:-
தேவையானவை:-
கார்ன் சிப்ஸ்– ½ கப்
அவல் – ½ கப்
ஓமப்பொடி – ½ கப்
வறுத்த பாசிப்பருப்பு – ½ கப்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20.
பாதாம் – 10
பிஸ்தா – 10
பரங்கிக்காய் விதை – 1 டேபிள் ஸ்பூன்
சாரைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2 மெல்லிய வளையமாக நறுக்கவும்.
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்துமல்லி – 1 கைப்பிடி
கிஸ்மிஸ் – 1 டேபிள் ஸ்பூன்
பேரீச்சை – 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கவும்.
உப்பு – ½ டீஸ்பூன்
பனங்கற்கண்டு பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
எண்ணெயைக் காயவைத்து வலை போட்ட கரண்டியில் போட்டு வேர்க்கடலையைப் பொன்னிறமாக வறுக்கவும். இதேபோல் நிதானமான தீயில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு, எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

அதே எண்ணெயில் பச்சைமிளகாயை க்ரிஸ்பாக வறுக்கவும். கருவேப்பிலை, கொத்துமல்லி, எல்லாவற்றையும் மொறுமொறுப்பாக வறுத்து இன்னொரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

அவலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரிந்ததும் எடுக்கவும். இதில் கார்ன் சிப்ஸ், ஓமப்பொடி , வறுத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை , முந்திரி, பாதாம், பிஸ்தா, பரங்கி விதை, சாரைப்பருப்பு, பச்சைமிளகாய் கருவேப்பிலை கொத்துமல்லி, கிஸ்மிஸ், பேரீச்சை ஆகியவற்றோடு கலக்கவும். உப்பையும், பனங்கற்கண்டுப் பொடியையும் தூவி நன்கு குலுக்கி பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...