எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 டிசம்பர், 2020

சிக்கன் குருமா

சிக்கன் குருமா/கோழிக்குருமா.


தேவையானவை:- சிக்கன் -அரை கிலோ,பெரிய வெங்காயம் -2, தக்காளி - 2, தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் -8 - 10, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் -4, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, தாளிக்க :- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - தலா 1, உப்பு - 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது. 

செய்முறை:- சிக்கனைக் கழுவி குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசாவை கால் டீஸ்பூன் எண்ணெயில் வெதுப்பி பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். இதில் மட்டனைப் போட்டுத் திறக்கி அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டுக் கொதி வந்ததும் 20 நிமிடம் சிம்மில் வைத்து வேகவைக்கவும். அதன் பின் உப்பு சேர்த்து இரு நிமிடங்கள் கொதித்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாதம் அனைத்திற்கும் ஏற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...