எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2013

LEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.

LEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.

LEMON PICKLE.:-

NEEDED:-

LEMON - 20 NOS.
TIL OIL ( GINGELLY ) -  100 ML.
RED CHILLI POWDER - 100 GM
SALT - 100 GM
MUSTARD - 1 TSP
ASAFOETIDA - 1 PINCH

METHOD:-

WASH AND DRY THE LEMONS IN A CLOTH. CUT INTO 8 PIECES AND REMOVE THE SEEDS. PUT IT IN A JAR WITH SALT. COVER IT WITH CLOTH & KEEP ASIDE FOR 2 DAYS. THEN SHAKE WELL ONCE IN A DAY . AFTER 4 DAYS KEEP THE JAR IN SUNLIGHT FOR 2 HOURS.

HEAT OIL IN A PAN. ADD MUSTARD AND ASAFOETIDA. OFF THE STOVE AND KEEP THE OIL FOR COOLING. AFTER COOLING ADD THE RED CHILLI POWDER ALONG WITH MARINATED LEMON &  SALT.  STIRR WELL AND PLACE IT IN SMALL JARS . USE IT AFTER 2 DAYS. IT WILL BE SERVED WITH CURD RICE OR CHAPPATHIS.

எலுமிச்சங்காய் ஊறுகாய்:-

தேவையானவை:-

எலுமிச்சங்காய் - 20
நல்லெண்ணெய் ( எள் ) -  100 மிலி
சிவப்பு மிளகாய்த்தூள் - 100 கி
உப்பு - 100 கி
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
எலுமிச்சங்காய்களைக் கழுவித் துடைக்கவும். எட்டுத் துண்டுகளாக வெட்டி விதை நீக்கவும். உப்பைச் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு வேடு கட்டி 2 நாட்கள் வைக்கவும். அதன் பின் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு தரம் குலுக்கி வைக்கவும். 4 நாட்கள் கழிந்தபின் அதை அப்படியே வெய்யிலில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

ஒரு பானில் நல்லெண்ணையை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, பெருங்காயப் பொடி  போடவும்.  அடுப்பை அணைத்து பானை இறக்கி வைக்கவும். ஆறியதும் மிளகாய்த்தூளுடன், ஊறிய எலுமிச்சை, உப்புக் கலவையைச் சேர்க்கவும்.. நன்கு கிளறி சின்ன ஜார்களில் மாற்றவும்.

இரண்டு நாட்கள் கழித்து உபயோகிக்கவும். இது தயிர்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது.

4 கருத்துகள்:

  1. தேனம்மை, நான் ஊறுகாய் -- எலுமிச்சை, மாங்காய் போன்றவை போடும்போது, பெருங்காயத்துடன், வெந்தயத்தை வறுத்துப்பொடித்தது ஒரு டேபிள் ஸ்பூன் கூட சேர்ப்பேன். சுவை கூடுதலாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி பாரதி மணி சார். நானும் வெந்தய மாங்காய், வெந்தய எலுமிச்சங்காய் ஊறுகாய்க்கு சேர்ப்பேன் :)

    பதிலளிநீக்கு
  3. எலுமிச்சை ஊறுகாய் போடுவதில் நான் எக்ஸ் பர்ட் .

    செய்யும்போது கொஞ்சம் வெந்தயப்பொடி கலந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதிகமாகப்போய்விடின் சற்று கசக்க நேரிடும். கவனமாக கால் ஸ்பூன் போட்டால் போதும்.

    அடுத்தது, அத்துடன், மாங்காய் இஞ்சி நன்றாக தோலை சீவி, மிகவும் சிறிது சிறிது ஆக நறுக்கி, பச்சை மிளகு ஒரு 50 கிராம் சேர்த்து இந்த எலுமிச்சை ஊறுகாயுடன் போட்டு பாருங்கள்.

    எலுமிச்சை ஊறுவதற்கு இரண்டு நாள் பிடிக்கும். அதை ஒவ்வொரு நாளும் கிளரி விட வேண்டும். அதற்குப்பின்பு தான் பிரிட்ஜில் வைக்கவேண்டும்.

    தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் ஆக இருக்கும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி சுப்பு சார். அடுத்த முறை செய்து பார்க்கிறேன். :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...