எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 ஜூலை, 2025

கருப்பட்டிக் கொழுக்கட்டை

கருப்பட்டிக்  கொழுக்கட்டை.


தேவையானவை :- பச்சரிசி - 4 ஆழாக்குகருப்பட்டி - 200 கிவெல்லம் - 200 கிஒரு முழுத் தேங்காய் - துருவவும்., எள்ளு - 2 டீஸ்பூன்உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் கழுவிக் காயவைத்து மாவாகச் சலிக்கவும்வெல்லம் கருப்பட்டியை நைத்துப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக சுடவைத்துக் கரைத்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்ஒரு பெரிய பேசினில் பச்சரிசி மாவைப் பரப்பி அதில் எள்தேங்காய்த் துருவல் , உப்பைத் தூவவும்கருப்பட்டி வெல்லப் பாகை வடிகட்டி அதில் ஊற்றிக் கரண்டிக் காம்பால் கிளறவும்நன்கு சேர்ந்ததும் கையால் நன்கு மென்மையாகப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

திங்கள், 28 ஜூலை, 2025

20 வித கொழுக்கட்டைகள்

20 வித கொழுக்கட்டைகள்

 


1.ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை

வியாழன், 24 ஜூலை, 2025

ஆடிக்கூழ்

ஆடிக்கூழ்



தேவையானவை:- பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பிப் பொடித்துச் சலிக்கவும் இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் (200 கி்ராம்), கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் (200 கிராம்), நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்., தண்ணீர் - 4 கப்

செய்முறை:- பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றிக் கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாகக் கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யை ஊற்றி இறக்கவும். சுடச் சுடப் பரிமாறவும்.

திங்கள், 21 ஜூலை, 2025

தேங்காய்ப்பால் நெய் சாதம்

தேங்காய்ப்பால் நெய் சாதம்



தேவையானவை :- பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். பொடியாக ஒடித்த முந்திரி பாதாம் -2 டீஸ்பூன்,

செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து தேங்காய்பாலில் போட்டுக் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து ஆறவிடவும். இதில் உப்பைத் தூவவும். நெய்யில் பாதாம் முந்திரியைத் தாளித்து வேகவைத்த தேங்காய்ப்பால் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.

வெள்ளி, 18 ஜூலை, 2025

சோளக்கஞ்சி

சோளக்கஞ்சி



தேவையானவை:- சோளம் – 1 கப், தண்ணீர் – 6  கப், உப்பு – ஒரு சிட்டிகை., பால் – 2 கப், ஜீனி – 1 டேபிள் ஸ்பூன், நெய்  - 2 டீஸ்பூன்.

செய்முறை:- சோளத்தில் தண்ணீர் போட்டுப் பிசிறி சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் வைப் செய்யவும். சுளகில்/ தட்டில் போட்டு லேசாக உமிபோகப் புடைத்துத் திரும்பவும் தண்ணீர் தெளித்துப் பிசறி ஊறியதும் மிக்ஸியில் இரண்டாம் முறை லேசாக விப்பரில் போடவும். திரும்பவும் புடைத்து உமி நீக்கிக் கழுவி 6 கப் தண்ணீரில் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகப்போடவும். வெந்ததும் இறக்கி மசித்து உப்பு சேர்க்கவும். சாப்பிடும் சமயம் பால், ஜீனி, நெய் சேர்த்துப் பரிமாறவும்.

திங்கள், 14 ஜூலை, 2025

பச்சரிசிப் புட்டு

பச்சரிசிப் புட்டு



தேவையானவை:- பச்சரிசி  மாவு - 1 கப், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், சீனி - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:-  பச்சரிசி மாவை லேசாக வறுத்து உப்புத்தூவி தண்ணீர் தெளித்துப் பிசறவும். அது பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்கும்படியும் உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுவே பக்குவம். இதை இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்து சூட்டோடு சீனி தேங்காய், நெய் கலந்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.

திங்கள், 7 ஜூலை, 2025

சர்க்கரைச் சோறு

சர்க்கரைச் சோறு



தேவையானவை:- பச்சரிசி – 2 கப், வெல்லம்-கால் கிலோ, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, கடலைப்பருப்பு – 1 கைப்பிடி, தேங்காய் – 1 துண்டு பல்லுப் பல்லாக நறுக்கவும். பால் – அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து நீரை வடித்து வைக்கவும். குக்கரில் அரிசியுடன் பாசிப்பருப்பு கடலைப்பருப்புப் போட்டு அரை கப் பாலுடன் நாலு கப் நீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். வெல்லத்தைப் பாகு வைத்து வடிகட்டி வைக்கவும். குக்கரைத் திறந்து சாதத்தை மசித்து வெல்லப்பாகை ஊற்றவும். லேசாக சூடுபடுத்தி பொங்கல் ஒன்று சேர்ந்ததும் இறக்கி வைத்து ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காயையும் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.

புதன், 2 ஜூலை, 2025

நுங்கு சர்பத்

நுங்கு சர்பத்


தேவையானவை:- நுங்கு – 4, வெட்டிவேர் சர்பத் – 4 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை – 1, ஐஸ் கட்டிகள் – கொஞ்சம், தண்ணீர் – 4 டம்ளர்.

செய்முறை:- நுங்கைத் தோலுரித்து மிக்ஸியில் வெட்டிப் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும். அல்லது பொடியாகத் துண்டுகள் செய்யவும். நான்கு கண்ணாடி டம்ளர்களில் இதைப் பகிர்ந்து போட்டு வெட்டிவேர் சர்பத் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றவும். எலுமிச்சையை வெட்டி விதையை எடுத்துவிட்டுப் பிழியவும். ஐஸ் கட்டிகள் போட்டு நீரூற்றி ஸ்பூனால் கலக்கி அருந்தக் கொடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...