தேங்காய்ப்பால் நெய் சாதம்
தேவையானவை :- பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். பொடியாக ஒடித்த முந்திரி பாதாம் -2 டீஸ்பூன்,
செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து தேங்காய்பாலில் போட்டுக் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து ஆறவிடவும். இதில் உப்பைத் தூவவும். நெய்யில் பாதாம் முந்திரியைத் தாளித்து வேகவைத்த தேங்காய்ப்பால் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக