எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 மே, 2026

கருணைக்கிழங்குக் குழம்பு

கருணைக்கிழங்குக் குழம்பு



தேவையானவை:- கருணைக்கிழங்கு - 250 கிசின்ன வெங்காயம் - 10வெள்ளைப் பூண்டு - 7தக்காளி - 1புளி - 1 எலுமிச்சை அளவுஉப்பு - 2 டீஸ்பூன்மஞ்சள்பொடி - 1 சிட்டிகைமிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்மல்லிப்பொடி - 4 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குஎண்ணெய் - 30 மிலிகடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.

 

செய்முறை:- கருணைக்கிழங்குகளை நன்கு கழுவிக் குக்கரில் வேகவைக்கவும். 10 நிமிடம் ஆறியபின் தோலுரித்துத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம்., பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பு சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம்., போடவும். கருவேப்பிலை., சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி கருணைக்கிழங்கை சேர்க்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி ., மிளகாய்ப்பொடி., மல்லிப்பொடி போடவும். நன்கு கொதிக்க வைத்து பின் 10 நிமிடம் மூடிபோட்டு சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...