எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஏப்ரல், 2026

கறிவடகக் குழம்பு

கறிவடகக் குழம்பு


தேவையானவை:- கறிவடகம் - 20, சின்ன வெங்காயம் - 10வெள்ளைப்பூண்டு - 5தக்காளி - 1புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைதேங்காய்த் துருவல் –கால் கப்,  எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். 2 கப் நீரில் புளியை ஊறவைத்துச் சாறெடுத்து அதில் உப்புமிளகாய்த்தூள்மஞ்சள்தூள் மல்லித்தூள் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு வெந்தயம் சீரகம் போட்டுத் தாளித்துக் கறிவடகம் கருவேப்பிலையை வறுக்கவும். வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டுப் பெருங்காயப் பொடியைத் தூவி வறுத்து அதில் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காயை அரைத்துச் சேர்த்து சிம்மில் வைத்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...