கறிவடகக் குழம்பு
தேவையானவை:- கறிவடகம் - 20, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 5, தக்காளி - 1, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் –கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை:- வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். 2 கப் நீரில் புளியை ஊறவைத்துச் சாறெடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு வெந்தயம் சீரகம் போட்டுத் தாளித்துக் கறிவடகம் கருவேப்பிலையை வறுக்கவும். வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டுப் பெருங்காயப் பொடியைத் தூவி வறுத்து அதில் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காயை அரைத்துச் சேர்த்து சிம்மில் வைத்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக