எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 ஏப்ரல், 2026

பீன்ஸ் தண்ணிக் குழம்பு

பீன்ஸ் தண்ணிக் குழம்பு



தேவையானவை:- பீன்ஸ் - 200 கிபெரிய வெங்காயம் - 1தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த துவரம் பருப்புபுளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைவரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்கருவேப்பிலை - 1 இணுக்குகொத்துமல்லி - 1/2 கட்டு.



செய்முறை:- பீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். பெரிய  வெங்காயத்தைத்  தோலுரித்து நீளமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும். ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு, பீன்ஸ், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும். ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...