எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 நவம்பர், 2016

பகாளாபாத், BAGALABATH.

பகாளாபாத்


தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால்-1 லிட்டர்,தயிர் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கிஸ்மிஸ், மாதுளை முத்துக்கள் தலா – 2 டீஸ்பூன், வெள்ளரி சின்னம் – 1 பொடியாக நறுக்கவும் , காரட் துருவியது – 1 டீஸ்பூன், கொத்துமல்லி - ஒரு கைப்பிடி பொடியாக அரிந்தது, பச்சை மிளகாய் – 1 பொடியாக அரிந்தது, மாவடு இஞ்சி- 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது. எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பால் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவைத்து எடுத்து நன்கு குழைத்து வைக்கவும். ஆறியவுடன் உப்பையும் தயிரையும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகும் பெருங்காயமும் தாளித்துப் போடவும். கிஸ்மிஸ், மாதுளை முத்து, வெள்ளரி, காரட் துருவல்கள், கொத்துமல்லி, பச்சை மிளகாய், மாவடு இஞ்சி துருவல்கள் சேர்த்து வெண்ணெயும் போட்டு நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து நிவேதிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...