எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 அக்டோபர், 2018

சிக்கன்/கோழி குருமா. :-

சிக்கன்/கோழி குருமா. :-

தேவையானவை :- கோழி – அரை கிலோ, பெரியவெங்காயம் – 1, தக்காளி – 1,  அரைக்க :- பச்சைமிளகாய் – 6, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, பூண்டு – 4 பல், சின்னவெங்காயம் – 6, தேங்காய் – 1 துண்டு, பொட்டுக்கடலை- 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2. இலை. உப்பு – ஒரு டீஸ்பூன். கருவேப்பிலை, கொத்துமல்லி சிறிது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை :- கோழியை ஒரு முறை கழுவிப் பிழிந்து குக்கரில் போட்டு சிறிது நீர் சேர்த்து 3 விசில் வேகவைத்து இறக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். தக்காளி, பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு  ஏலக்காய் இலை போட்டுத் தாளித்துப் பெரிய வெங்காயம் தக்காளியை நன்கு சுருள வதக்கவும். இதில் அரைத்த மசாலாவைப் போட்டு சிறிது திறக்கிவிட்டு உப்பு சேர்த்து வேகவைத்த கோழிக்கறியைச் சேர்க்கவும். திரும்ப குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கி கருவேப்பிலை கொத்துமல்லி தூவி பரோட்டாவுடன் பரிமாறவும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...