எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 அக்டோபர், 2018

கத்திரிக்காய்ப் புளிக்குழம்பு.

கத்திரிக்காய்ப் புளிக்குழம்பு.


தேவையானவை. :-

பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 6, தக்காளி - 1, சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லி அளவு, உப்பு - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் வெந்தயம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு.

செய்முறை. :- கத்திரிக்காயைக் காம்பு வெட்டி நான்காகக் கீறிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பூண்டை உரித்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும். புளியை கப் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். மஞ்சள்தூள், சாம்பார் தூள் கலந்து வைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து வெந்தயம் சீரகம் பெருங்காயம் போட்டுத் தாளித்து  கத்திரிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும்.அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு, கருவேப்பிலை போட்டு நன்கு பிரட்டி சாம்பார்பொடி மஞ்சள் பொடி போடவும்.நன்கு பிரட்டி புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்ததும் மூடி போட்டு சிம்மில் பத்துநிமிடம் வைத்து ஒரு சிட்டிகை சீனி அல்லது வெல்லம் கலந்து இறக்கவும்.

சௌ சௌ கூட்டு அல்லது பீர்க்கங்காய்க் கூட்டு, புடலங்காய்க் கூட்டுடன் சூடான சாத்தோடு பரிமாறவும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...