எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 ஜூன், 2021

காய்கறிப் புலவு.

காய்கறிப் புலவு/வெஜ் புலவ்.


தேவையானவை :- பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி அல்லது சீரகச்சம்பா அரிசி - 1 கப், காய்கறிக்கலவை - காரட், பீன்ஸ் , பட்டாணி, காலிஃப்ளவர், உருளை - 1 கப் சின்னமாக நறுக்கியது. பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சைமிளகாய் - 2, புதினா, கொத்துமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2 துண்டு, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு - 1, சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன். 

செய்முறை:- அரிசியைக் களைந்து 20 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். அடி கனமான ஒரு பானில் எண்ணெயை ஊற்றி நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு அதிலேயே பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு, சோம்பு போட்டு வதக்கவும். தண்ணீர்போல் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். இத்துடன் காய்கறிக் கலவை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், புதினா கொத்துமல்லி போட்டு நன்கு கிளறி உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். எல்லாம் கொதித்து வரும்போது  ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி சேர்த்துக் கொதித்ததும் தீயை அடக்கி வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் குறைந்த தணலில் வேகவைத்து இறக்கவும். தயிர்ப்பச்சடி, சிப்ஸுடன் பரிமாறவும். 
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...