எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

13.பலாக்காய் பிரியாணி

13.பலாக்காய் பிரியாணி


தேவையானவை :- பலாக்காய் – கால் பாகம், பச்சரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, வரமிளகாய் – 6, சோம்பு – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – 6, தேங்காய் – கால் பாகம், பூண்டு – 4 பல், இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, முந்திரி – 4, புதினா மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – 1, உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பலாக்காயை ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகள் செய்து வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். பச்சரிசியை ஊறவைக்கவும். வெங்காயம் தக்காளியை சதுரமாக நறுக்கவும். வரமிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, தேங்காய், பூண்டு, இஞ்சி, முந்திரி, புதினா மல்லித்தழையை சிறிது நீர்விட்டு மசிய அரைத்து வைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொன்னிறமாக வதக்கி வெந்த பலாக்காயைச் சேர்க்கவும். நன்கு கலக்கி மசாலாவையும் உப்பையும் சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இரண்டு கப் நீர் ஊற்றி அரிசியைப் போடவும். நன்கு கிளறி குக்கர் மூடியை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும். வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி, பூந்திப் பச்சடியுடன் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...