எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

பாம்பே சட்னி:-

பாம்பே சட்னி:-


தேவையானவை:- கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப், பெரியவெங்காயம் – பாதி, தக்காளி -1, வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் -2, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தாளிக்க:- கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிது, எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை:- கடலைமாவை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய் தாளித்து நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த கடலை மாவை ஊற்றவும். அது நன்கு கொதித்ததும் கரண்டியால் கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். மல்லித்தழை, எலுமிச்சைச் சாறு கலந்து உபயோகிக்கவும். 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...