எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2023

கேப்பை வத்தல்

கேப்பை வத்தல்



தேவையானவை:- கேழ்வரகு – ஒரு கிலோ, உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:- கேப்பையை ஊறவைத்துக் கிரைண்டரில் ஆட்டவும். இதில் நீரூற்றிப் பிழிந்து பால் எடுக்கவும். ஒரு கிலோ கேப்பைக்கு 20 கப் நீரூற்றிப் பிழியலாம். இரவு முழுவதும் அந்தப் பாலைப் புளிக்க வைத்து மறுநாள் காலையில் நன்கு கலக்கி அடுப்பில் வைத்துக் கைவிடாமல் நன்கு கிளறவும். கண்ணாடி போல் வெந்ததும் உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். கையை நீரில் நனைத்து மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கவேண்டும். இதுவே பதம். ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்துப் பாய் மேல் விரித்துக் கேப்பைக் கூழைக் கரண்டியால் வடகம் போல் ஊற்றித் தடவிக் காயவிடவும். மாலையில் திருப்பிப் போட்டு நீர் தெளித்து வடகங்களை உரித்துப் போடவும். இன்னும் நான்கு நாட்கள் வெய்யிலில் காயவைத்துப் பொரிக்கலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...