எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

கறிவடகம்

கறிவடகம்


தேவையானவை:- உளுந்து - 2 கப், சின்ன வெங்காயம் – 1 கிலோ, பூண்டு – 50 கிராம், கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், ஜவ்வரிசி – 50 கிராம், வரமிளகாய் – 20 அல்லது மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,  உப்பு – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி.

செய்முறை:- உளுந்தை ஊறவைத்து நீர் இல்லாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வரமிளகாயையும் ஊறவைத்து நீரில்லாமல் அரைத்து இதில் சேர்க்கவும். அல்லது மிளகாய்ப் பொடியைப் போட்டுக் கொள்ளவும். ஜவ்வரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து இதில் நீர் இல்லாமல் போடவும். சீரகம், கடுகைச் சேர்க்கவும். உப்பைப் பொடித்துச் சேர்க்கவும். கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயத்தைச் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு பாயை விரித்து அதன் மேல் ஒரு காட்டன் துணி அல்லது புடவையை நனைத்துப் பிழிந்து போடவும். இதில் எலுமிச்சை அளவு கறிவடக மாவை எடுத்துக் கிள்ளி வைக்கவும். மாலையில் காய்ந்ததும் தாம்பாளத்துக்கு மாற்றித் திருப்பி வைக்கவும். நான்கைந்து நாட்கள் வெய்யிலில் காயவைத்து எடுத்துப் பத்திரப் படுத்தவும். தயிர்சாதம், சாம்பார் சாதத்துக்கு இதைப் பொரித்துச் சாப்பிடலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...