எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 பிப்ரவரி, 2023

தக்காளி வடகம்

தக்காளி வடகம்



தேவையானவை:- பச்சரிசி – 1 கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், தக்காளி – 6, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டி வைக்கவும். தக்காளியை வெந்நீரில் ஊறவைத்துத் தோலுரித்து மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தக்காளிக் கூழையும் மிளகாய்த்தூளையும், மாவுடன் ஊற்றவும். கைவிடாமல் நன்கு கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். ஒரு ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். ஸ்பூனால் மோந்து மாவை ஊற்றவும். வெய்யிலில் நன்கு காய்ந்ததும் மாலையில் துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். மிக நீளமாக இருந்தால் கட் செய்து இன்னும் நான்கு நாட்கள் காயவைத்து எடுக்கவும். இதைப் பொரித்துச் சாப்பிடலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...