தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
தேவையானவை:- இட்லி அரிசி- 2 கப், வெல்லம் - 1கப், தேங்காய் - 1, ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:- இட்லி அரிசியைக் கழுவி ஊறவைத்து கிரைண்டரில் நைஸாக ஆட்டிக் கொள்ளவும். அதிகப்படியான தண்ணீரை உறிஞ்ச சுத்தமான காட்டன் துணியில் மாவைக் கொட்டி மூடி வைக்கவும். தேங்காயைத் துருவி 3 பால் பிழிந்து கொள்ளவும். அரைத்த மாவை சீடைக்காய்கள் போலக் கிள்ளி நீளவாக்கில் உருட்டிப் போடவும். மூன்றாம் பாலில் வெல்லத்தைப் போட்டுக் கரைக்கவும். அதில் இரண்டாம் பாலையும் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். கொழுக்கட்டைகளைக் கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தூவவும். அடுத்துக் கொதிவந்ததும் அடுத்த கைப்பிடி தூவவும்..கொதித்ததும் கரண்டியால் நன்கு கிளறாமல் லேசாகக் கலக்கி விடவும். கொழுக்கட்டைகள் மேலே எழும்பி வந்ததும் கரண்டியால் நன்கு கலக்கி ஏலப்பொடி தூவி முதல் பால் ஊற்றி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக