எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 மார்ச், 2026

கருவேப்பிலைக் குழம்பு

கருவேப்பிலைக் குழம்பு


தேவையானவை:- இளம் கருவேப்பிலை - 1 கிண்ணம், சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, தக்காளி - 1, புளி - 1 எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, சோம்பு - 1/2 டீஸ்பூன், ஜீரகம் - 1/4 டீஸ்பூன், மிளகு - 5, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

 

செய்முறை:- கருவேப்பிலையைக் கழுவி அதோடு சோம்பு, சீரகம், மிளகு, மல்லிப் பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, புளி போட்டு நன்கு மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பின் வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போடவும். நன்கு வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றித் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சூடாக சாதம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...