எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 பிப்ரவரி, 2023

கலர் வடகம்

கலர் வடகம்



தேவையானவை:- பச்சரிசி – 1 கிலோ, உப்பு – 2 டீஸ்பூன், ஜவ்வரிசி – 100 கிராம், ரெட் ஃபுட் கலர், க்ரீன் புட் கலர் – சிறிது.

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து முதல் நாள் இரவே ஆட்டி வைக்கவும். ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். மறுநாள் காலை ஒரு பெரிய பாத்திரத்தில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஜவ்வரிசி மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது அரைத்த பச்சரிசி மாவையும் ஊற்றிக் கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். ஒரு ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ் மாவை மூன்று பங்காகப் பிரித்து ஒன்றை வெள்ளையாகவே வைக்கவும். இன்னொன்றில் ரெட் ஃபுட் கலரும், இன்னொன்றில் க்ரீன் புட் கலரும் சேர்த்து நன்கு கலக்கவும். மாவைக் கரண்டியால் மோந்து ஊற்றித் தடவவும்.  வெய்யிலில் நன்கு காய்ந்ததும் மாலையில் துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். இன்னும் நான்கு நாட்கள் காயவைத்துப் பொரித்துச் சாப்பிடலாம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...