எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

குழம்பு வடகம்

குழம்பு வடகம்



தேவையானவை:- பெரியவெங்காயம் – 2 கிலோ, முழு பூண்டு – 3, கடுகு – 100 கி, உளுந்து – 100 கி, சீரகம் – 100 கி , வெந்தயம் – 100 கி, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பூண்டைத் தட்டித் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து நைஸாக நீளவாக்கில் அரியவும். இதில் தட்டிய பூண்டு, கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பொடியாக அரிந்த கருவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து பெரிய கொய்யாக்காய் அளவு உருண்டைகளாக்கவும். வெய்யிலில் காயவைக்கவும். தினமும் உருண்டைகளை அழுத்திப் பிடித்து வெய்யிலில் காயவைக்கவும். இது சுண்டிக் காய்ந்து எலுமிச்சை அளவில் சுருங்கி அரக்கு நிறமாவதுதான் பதம். குழம்பு கூட்டு போன்றவை தாளிக்கும்போது இதில் சிறிது கிள்ளிப் போட்டுத் தாளிதால் மணம் ஊரையே கூட்டி விடும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...