எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 மே, 2023

சுண்டை வத்தல் மணத்தக்காளி வத்தல் குழம்பு

சுண்டை வத்தல் மணத்தக்காளி வத்தல் குழம்பு



தேவையானவை:- சுண்டைவத்தல் – அரைக் கைப்பிடி, மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10, தக்காளி – 1, வரமிளகாய் – 8, மல்லி – 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், மிளகு – 10, சீரகம் – 1 டீஸ்பூன். மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 50 மிலி. உப்பு – 2 டீஸ்பூன், புளி – 1 எலுமிச்சை அளவு. கருவேப்பிலை 1 இணுக்கு. கடுகு, வெந்தயம் பெருங்காயம் – சிறிது, வெல்லம் - சிறுதுண்டு.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், மல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு,மிளகு, சீரகத்தை வாசனை வரும்வரை வறுத்துப் பொடிக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து வைக்கவும். நல்லெண்ணையைக் காயவைத்து சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தலைப் பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு வெந்தயம் பெருங்காயம் தாளித்து சுத்தம் செய்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த பொடியைப் போட்டுப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்துச் சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தலைச் சேர்த்து இறக்கவும். 

சூடாக சாதத்தோடு பரிமாறவும். பசியைத் தூண்டும் குழம்பு இது. நாவின் கசப்பைப் போக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...