எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 பிப்ரவரி, 2024

5.மரவள்ளிக்கிழங்கு போளி

5.மரவள்ளிக்கிழங்கு போளி



 

தேவையானவை:- மரவள்ளிக்கிழங்கு – 250 கிராம், மைதா – 2 கப், வெல்லம் – ஒன்றரை கப், தேங்காய்த்துருவல் – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 200 கி, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை.

 

செய்முறை:- மரவள்ளிக்கிழங்கை அவித்து உதிர்த்து வைக்கவும். வெல்லம், தேங்காய்த்துருவல், மரவள்ளிக்கிழங்கை ஒரு பானில் போட்டுக் கெட்டியாகும் வரை கிளறி சிறிது நெய் சேர்த்து இறக்கிவைக்கவும். மைதாவில் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை ஜீனி சேர்த்து நீர் தெளித்துப் பிசைந்து எண்ணெய் ஊற்றி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மைதாவில் உருண்டைகள் செய்து அதன் நடுவில் மரவள்ளிக்கிழங்கு பூரணத்தை வைத்துக் கனமான சப்பாத்திகள் போலத் தட்டி நெய் விட்டுச் சுட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...