எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

20.ஜவ்வரிசிப் பொங்கல்

20.ஜவ்வரிசிப் பொங்கல்



தேவையானவை:- ஜவ்வரிசி - 1 கப், பச்சரிசி – கால் கப், பாசிப் பருப்பு - 1/2 கப், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும், இஞ்சி – சிறு துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, முந்திரி – 6

செய்முறை:- ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.  பச்சரிசியையும் பாசிப்பருப்பையும்  கழுவி வேகவிடவும்.இதில்  பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய், பொடியாக அரிந்த இஞ்சி சேர்த்து  வேக விடவும். நன்கு மலர்ந்ததும் ஜவ்வரிசிசேர்த்துக்கிளறவும்.ஒன்றுசேர்ந்ததும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்துப் பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...