எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 டிசம்பர், 2016

வெல்லப்புட்டு. JAGGERY PUTTU.

வெல்லப்புட்டு:-

தேவையானவை:-புழுங்கல் அரிசி – 1 கப், துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், வெல்லம் – 2 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, மஞ்சள்தூள், உப்பு தலா – 1 சிட்டிகை.

செய்முறை:- புழுங்கல் அரிசியை ஊறவைத்து நீரை இறுத்துப் பொடித்துச் சலிக்கவும். துவரம்பருப்பை ஊறவைக்கவும்.புழுங்கலரிசி மாவை வெறும் வாணலியில் சிவப்பாக வறுக்கவும். ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு உப்பைச் சேர்க்கவும் . இந்தத் தண்ணீரை ஆறிய மாவில் போட்டுப் பிசறி வைக்கவும். இதில் துவரம்பருப்பைச் சேர்த்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும். வெல்லத்தைத் தூள் செய்து முத்துப் பாகு வைத்து அதில் இந்தப் அரிசி பருப்புக் கலவையப் போடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப்போட்டுக் கலந்து வைக்கவும். ஆறியது உதிர் உதிராய் வாசனையாக இருக்கும் இந்தப் புட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...