எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 மார்ச், 2023

முள்ளுமுறுக்கு வத்தல்

முள்ளுமுறுக்கு வத்தல்


தேவையானவை :- பச்சரிசி - 1 கப், உப்பு - கால் டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும். இதில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கூழ் கண்ணாடிபோல் நன்கு வெந்து வரும். தண்ணீரைத் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் இதுவே பதம். இதில் ஓமம், சீரகம், எள்ளைச் சேர்த்து நன்கு கிளறவும்.பாயின் மேல் நனைத்த துணியை விரித்து முள்ளுமுறுக்கு அச்சில் போட்டுப் பிழியவும். மாலை துணியில் இருந்து பிய்த்து சீராக வெட்டித் தட்டில் போட்டுக் காயவைக்கவும். இரு நாட்கள் காய்ந்ததும் பொரித்துச் சாப்பிடலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...