எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 செப்டம்பர், 2024

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்

11.தேங்காய்ப்பால் கற்கண்டுப் பொங்கல்


 

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், தேங்காய் – 1, கற்கண்டு – 150 கி, ஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )., பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை.

 

செய்முறை:- தேங்காயை அரைத்து மூன்று பால் எடுக்கவும். மூன்றாம் பால் இரண்டு கப், இரண்டாம் பால் ½ கப் முதல் பால் திக்காக ¼ கப் எடுக்கவும். பச்சரிசியை லேசாக வறுத்துக் களைந்து மூன்றாம் பாலில் குக்கரில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி நன்கு கரண்டியால் மசிக்கவும். அதில் கற்கண்டைப் பொடித்துப் போட்டு  இரண்டாம் பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும். இறுகி வந்ததும் முதல் பாலையும் ஏலப்பொடியையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்கவும். இதற்கு முந்திரி கிஸ்மிஸ் விரும்பினால் நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...