எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 மே, 2014

BEANS ILANKUZHAMBU. பீன்ஸ் இளங்குழம்பு. குங்குமம் தோழியில்.

BEANS ILANKUZHAMBU:-

NEEDED:-
BEANS - 200 GMS
BIG ONION - 1 NO.
TOMATO - 1 NO
GREEN CHILLY - 1 NO.
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
RED CHILLIES - 2 NOS HALVED.
CURRY LEAVES - 2 ARK
CORIANDER LEAVES - 1 BUNCH


METHOD:-
REMOVE THE NERVE AND CUT THE BEANS INTO  2 INCH PIECES.  PEEL AND CUT THE ONION ,& TOMATO INTO THIN SLICES. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQUEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.

.PRESSURE COOK THE THUVAR DHAL , BEANS,ONION, TOMATO , GREEN CHILLY WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.ADD WASHED AND CHOPPED CORIANDER LEAVES.

HEAT OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH IDDLIES OR PLAIN RICE WITH PERPPER PAPPADS.

பீன்ஸ் இளங்குழம்பு
பீன்ஸ் இளங்குழம்பு :-
தேவையானவை.:-
பீன்ஸ் - 200 கி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு.
கொத்துமல்லி - 1/2 கட்டு.


செய்முறை:-
பீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். பெரிய  வெங்காயத்தைத்  தோலுரித்து நீளமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.

ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, பீன்ஸ்,  வெங்காயம், தக்காளி , கீறிய பச்சை மிளகாய் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும். ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடனோ , சாதம் மிளகு பப்படத்துடனோ பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...