எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஜனவரி, 2017

.ரிங் முறுக்கு:- செகோடிலு.- CHEGODILU

.ரிங் முறுக்கு:- செகோடிலு.

தேவையானவை:- அரிசி மாவு – ஒன்றரை கப், தண்ணீர் – ஒன்றரை கப், உளுந்தமாவு – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், எள்ளு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பாசிப்பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊறப்போடவும். ஒரு பௌலில் அரிசிமாவையும் உளுந்தமாவையும் போடவும். ஒரு பானில் ஒன்றரை கப் நீரைக் கொதிக்கவைத்து அதில் உப்பு, வெண்ணெய், பாசிப்பருப்பைப் போடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் மாவைச் சிறிது சிறிதாகத் தூவியபடி கலந்து நன்கு சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்.மாவு ஆறியதும் அதில் சீரகம், எள்ளு, மிளகாய்த்தூள், பெருங்காயம் போட்டுத் திரும்பப் பிசையவும். பத்து நிமிடம் ஊறவிடவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து திரி போல் உருட்டி இரண்டு முனைகளையும் ஒட்டி சின்ன வளையல் போல செய்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...