எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 ஜூலை, 2022

பாலக் பனீர்

பாலக் பனீர்


 

தேவையானவை:- பாலக்கீரை - 1 கட்டு, பனீர் - 1 பாக்கெட் ( வீட்டிலேயே ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி எலுமிச்சை ஒரு மூடி பிழிந்து திரிய வைத்து பனீர் தயாரித்துக் கொள்ளலாம்), சீரகம் - 1 டீஸ்பூன், பெரியவெங்காயம்  - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், தக்காளி – 1, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன், சீனி - 1/2 டீஸ்பூன், கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்


 

செய்முறை:- பாலக்கீரையை வேகவைத்து ஆறியதும் அரைத்து வைக்கவும். பனீரை சதுரத் துண்டுகள் செய்து எண்ணெயில் பொறித்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து எண்ணெயில் ப்ரவுனாக வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அதில்  தக்காளியை அரைத்துச் சேர்த்து சீனி, உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு வதக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரியும்போது அரைத்த பாலக்கீரையையும், பனீரையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி சப்பாத்தி நான், ருமாலி ரொட்டியுடன் பரிமாறவும். 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...