எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 ஜூன், 2025

பச்சைத் தேன்குழல்

பச்சைத் தேன்குழல்



தேவையானவை :- பச்சரிசி - 2 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு – அரை   டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும். எண்ணெயைக் காயவைத்து  மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து உடனே திருப்பிவிட்டு வெண்ணிறமாக எடுத்துப் பரிமாறவும்.

திங்கள், 16 ஜூன், 2025

பாசிப்பயறுக் கிச்சடி

பாசிப்பயறுக் கிச்சடி



தேவையானவை:- பச்சரிசி – 1 கப், உடைத்த பாசிப்பயறு – ½ கப், தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்., ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய்ப் பொடி – தேவைப்பட்டால் ), உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்., உப்பு – 1 டீஸ்பூன். தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போட்டு நிவேதனம் செய்யவும்.

வெள்ளி, 13 ஜூன், 2025

கோதுமை மாவிளக்கு

கோதுமை மாவிளக்கு


தேவையானவை:- சம்பா கோதுமை – 1 கப், நெய் – கால் கப், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- சம்பா கோதுமையைப் பொரியரிசி போலப் பொன்னிறமாக வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் முக்கால்  பங்கு நெய்யை ஊற்றிச் சர்க்கரை சேர்த்துத் தேவையான தண்ணீர் தெளித்து மாவாகப் பிசைந்து தீபங்கள் செய்யவும். தீபத்தில் மிச்ச நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரிப் போட்டுக் மஞ்சள், குங்குமம் வைத்து விளக்கேற்றவும்.

திங்கள், 2 ஜூன், 2025

மோர்க்களி

மோர்க்களி


தேவையானவை:- அரிசி மாவு  - 2 கப், புளித்த மோர் – ½ கப், எண்ணெய் – ¼ கப், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, மோர் மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு- ½ டீஸ்பூன்

செய்முறை :- மோரில் உப்பு சேர்த்து அரிசி மாவைப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய்,  கருவேப்பிலை தாளித்து மாவைச் சேர்க்கவும். தண்ணீர் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...