எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

2.வெண்பொங்கல்

2.வெண்பொங்கல்



 

செய்முறை:- பச்சரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/3 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும். இஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும். மிளகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 15 ( முழு), கருவேப்பிலை - 1 இணுக்கு, மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்., உப்பு - 1/2 டீஸ்பூன்.

 

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...