ராஜ்மா சுண்டல்:-
தேவையான்வை:-
ராஜ்மா பீன்ஸ் – 1 கப், சீரகம் – அரை டீஸ்பூன், கொத்துமல்லி – ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள்
– அரை டீஸ்பூன், தக்காளி – 1, உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன்,
சீரகம் ஒரு டீஸ்பூன்.
செய்முறை:-
ராஜ்மா பீன்ஸைக் குக்கரில் போட்டு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும்வரை வேகவிடவும்.
சீரகம் கொத்துமல்லி மிளகாய்த்தூள் தக்காளியை விழுதாக அரைக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து
அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எண்ணெய் பிரிந்ததும் ராஜ்மா பீன்ஸை சேர்க்கவும்.
உதிரானதும் இறக்கி நிவேதிக்கவும்,
பட்டர்பீன்ஸ்
சுண்டல்.:-
தேவையானவை:-
பட்டர்பீன்ஸ் – 2 கப், இஞ்சி – 1 துண்டு, புதினா - 1 கைப்பிடி, தக்காளி – 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல்-2 டீஸ்பூன், எண்ணெய்- 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். சீரகம்
– அரை டீஸ்பூன்.
செய்முறை:-
பட்டர்பீன்ஸுடன் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேகவைக்கவும். இஞ்சி புதினா தக்காளி
மிளகாய்த்தூளை அரைத்து வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த விழுதைப்
போட்டுப் புரட்டவும். லேசாய் எண்ணெய் பிரியும்போது பட்டர்பீன்ஸைப் போட்டு தேங்காய்த்துருவலையும்
போட்டு இறக்கவும்.

பாசிப்பருப்பு
சுண்டல் :-
தேவையானவை:-
பாசிப்பருப்பு – 2 கப், காரட் – 1 டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி, தேங்காய்த்துருவல்
– 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1. உப்பு – கால்
டீஸ்பூன்.
செய்முறை:-
பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவிடவும்.
எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துத் துருவிய காரட் கொழுந்து
கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் உப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக்
கிளறி தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும். நிவேதிக்கவும்.
முளைவிட்ட
பயறு டாகோஸ்:-
தேவையானவை:-
மைதா – 1கப், கார்ன் ஃப்ளோர் – 1கப், எண்ணெய்- பொறிக்கத் தேவையான அளவு, உப்பு – அரை
டீஸ்பூன், ஃபில்லிங் செய்ய :- முளைவிட்ட பாசிப்பயறு – 1 கப், தக்காளி – 2, வயலட் முட்டைக்கோஸ்
– 4 இதழ்கள், வெங்காயத்தாள் – அரைக்கட்டு, குடைமிளகாய்- 1, கொத்துமல்லித்தழை- ஒரு கைப்பிடி,
மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – கால்டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்.
எண்ணெய்- 2 டீஸ்பூன்.. தக்காளி கெச்சப் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-
மைதா, கார்ன் ஃப்ளோரை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து பூரிகளாக சுட்டெடுத்து
நடுவில் போட் போல மடக்கி வைக்கவும். முளைவிட்ட பாசிப்பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஒரு தக்காளி, குடைமிளகாய், வெங்காயத்தாளைப் பொடியாக அரிந்து எண்ணெயில் வதக்கி உப்பு
மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவைத்த பயறையும் போட்டு நன்கு கலந்து இறக்கவும்.
ஒரு தக்காளியையும் வயலட் முட்டைக்கோஸையும் நீளமாக நறுக்கவும். கொத்துமல்லித்தழையைப்
பொடியாக அரியவும். டாகோஸில் முதலில் சிறிது தக்காளி முட்டைக்கோஸைத் தூவி பயறு மசாலாவை
வைத்து அதன் மேல் சிறிது தக்காளி முட்டைக்கோஸ், கொத்துமல்லித்தழை தூவி கெச்சப்பை சிறிது
ஸ்ப்ரே செய்து மடக்கிக் கொடுக்கவும்.

கோதுமை சுண்டல்
தேவையானவை:-
கோதுமை – 1 கப், வரமிளகாய் – 1, தனியா – ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை,
உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:-
கோதுமையைக் களைந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2 கப் நீர் விட்டு குக்கரில் ஒரு விசில்
வரும்வரை வேகவிடவும். வரமிளகாயையும் தனியாவையும் வறுத்து உப்புடன் பொடிக்கவும். எண்ணெயைக்
காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயப் பொடி தாளித்து கோதுமையைக் கொட்டவும் இதில் வறுத்த
பொடியைப் போட்டுக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.