எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 மே, 2021

30 வகை பிரியாணி, குமுதம் சிநேகிதிக்காக

30 வகை பிரியாணி, குமுதம் சிநேகிதிக்காகத் தேனம்மை லெக்ஷ்மணன்.

 


 

பெர்ஸியாவிலிருந்து பிரியமுடன் வந்த பிரியாணி :-

 

பிரிஞ்ச் என்றால் பெர்ஸிய மொழியில் அரிசி என்று அர்த்தம்பிரியான் என்றால் அரிசியை வறுத்துச் சமைப்பது என்றும் பொருள்பெர்ஸியாவிலிருந்து இந்தியாவுக்கு இந்த பிரியானை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொண்டுவந்து பிரியாணியாக வளர்த்தெடுத்த பெருமை முகலாய மன்னர்களையே சாரும்அரேபிய வணிகர்களும் இந்தியாவுக்கு இவ்வுணவைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.  ஹைதை நிஜாம் ( முதலாம் ஆஸஃப் ஜா ) அரண்மனைகளில்தான் இவ்வுணவு மிகப் பிரசித்தியடைந்தது.  நவாபுகளின் சிறப்புணவான இது இன்று இந்தியாவின் தெருக்கள்தோறும் கிடைக்கிறது

 

ஆசிய அரேபிய மக்களின் விருந்துணவுகளில் பிரியாணிக்கு என்றுமே முக்கிய இடம் உண்டுபிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல்நலம் பேணுவதிலும் முக்கியத்துவம் வகிக்கின்றனஅரிசி உடலுக்கும் மூளைக்கும் எரிபொருளாகும் கார்போஹைட்ரேட்டைத் தருகிறதுநெய்தயிர்எலுமிச்சை உடலைக் குளிர்ச்சியாக்குகின்றன.  


 இஞ்சிபூண்டுமிளகுஜாதிக்காய்ஜாதிபத்திரி ஜீரணத்துக்கும்இறைச்சியில் கிடைக்கும் ப்ரோட்டீன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றனபட்டைகிராம்புஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்ப்பதால் உடல்வலி நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறதுஇவை பித்தத்தை நீக்கிக் கல்லீரலையும் சுத்தப்படுத்துகின்றனமஞ்சள் குடல்புண்ணை ஆற்றுவதோடு வீக்கத்தையும் நீக்குகிறதுஇறைச்சியில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் நம்ம ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதோடு எலும்புக்கு வளர்ச்சி கொடுத்து , விட்டமின் குறைபாட்டையும் ( செலினியம்விட்டமின் பிபி 6, நியசின்நீக்குதுநெய்யும் இறைச்சியிலிருந்து கிடைக்கும் கொழுப்புகளும் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றனகொழுப்புச் சத்துநெய்,வெண்ணெய் இருக்குதேஉடல் பருமனாயிடுமோன்னு கவலைப்பட வேண்டாம்.  ஏன்னா பாசுமதி அரிசி உண்பதால் உடல் எடைகுறையும் என்பதே உண்மைஎனவே பிரியாணி செய்து அனைவருக்கும் ஈந்து பிரியமுடன் உண்போம்.


  

வெள்ளி, 21 மே, 2021

வாழைக்காய் கத்திரிக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு

வாழைக்காய் கத்திரிக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு


தேவையானவை :- வாழைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, சின்ன வெங்காயம் - 6, பூண்டு - 6 பல், தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயம் - சிறு துண்டு, வெந்தயம், சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒரு பாத்திரத்தில் உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய், கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயம், சீரகம், சோம்பைப் போடவும். தக்காளி, சின்ன வெங்காயம் பூண்டு, கத்திரிக்காய் வாழைக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி இந்தப் புளிக்கரைசலில் போடவும். 

அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது அடக்கி வைத்து மூடி போட்டு இன்னும் பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடான சோறு, அப்பளத்தோடு பரிமாறவும். 

 

வியாழன், 6 மே, 2021

அவிச்ச வேர்க்கடலை

அவிச்ச வேர்க்கடலை


தேவையானவை :- தோலுரித்த வேர்க்கடலை- 1 கப், பெரியவெங்காயம் - 1, கொத்துமல்லித்தழை - சிறிது, உப்பு - அரை டீஸ்பூன், டொமாடோ சாஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வேர்க்கடலையுடன் உப்புப் போட்டுக் குக்கரில் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வேகவைத்து நீரை வடிக்கவும். அதில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், கொத்துமல்லித்தழை, தக்காளி சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...