எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

வெங்காயம் தக்காளி உருளை திறக்கல்.

வெங்காயம் தக்காளி உருளை திறக்கல்.

தேவையானவை :- வெங்காயம் - 1, தக்காளி - 2, அவித்த உருளைக்கிழங்கு சின்னம் - 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு, அவித்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து லேசாக பிசைந்து போடவும். அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இது இட்லி தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

சனி, 7 டிசம்பர், 2019

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

தேவையானவை :- மூங்கில் அரிசி – 1 கப் , நாட்டுச் சர்க்கரை – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை,
செய்முறை :- மூங்கில் அரிசியை ஊறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவி நிவேதிக்கவும். விரும்பினால் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போடலாம்
 

வியாழன், 5 டிசம்பர், 2019

29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

தேவையானவை :- சுண்டைக்காய் – 1 கப், பாகற்காய் – 1, சேனை – 1 துண்டு, கிள்ளு பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு – அரை கப், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், தக்காளி – 1, புளி – 1 நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 1இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.
செய்முறை:-  சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி நீரில் போடவும். பாகற்காயை விதையில்லாமல் பொடியாக நறுக்கவும். சேனைக்கிழங்கை ஒரு இஞ்ச் துண்டுகள் செய்து எண்ணெயில் வதக்கி வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சுண்டைக்காயையும் பாகற்காயையும் போட்டு நன்கு வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்கும்போது பருப்பையும் வெந்த சேனையையும் சேர்க்கவும். மூடி போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் வெல்லம் போட்டு இறக்கி நிவேதிக்கவும்.
 

செவ்வாய், 3 டிசம்பர், 2019

28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு

28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு.  

தேவையானவை :- வறுத்த கம்பு மாவு – 1 கப், நாட்டுச் சர்க்கரை –அரை கப், தேங்காய்த்துருவல் – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை :- கம்பு மாவில் உப்பை சேர்த்துத் தண்ணீர் தெளித்துப் பிசறி ஈரத்தோடு பெருங்கண்ணிச் சல்லடையில் சலித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைக்கவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து நன்கு கலக்கி நிவேதிக்கவும்.
 

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

27. விஜயதசமி – பால் பணியாரம்

27. விஜயதசமி – பால் பணியாரம்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், உளுந்து – 1 கப், பால் அல்லது தேங்காய்ப் பால் – 3 கப் ( அ ) மில்க் மெய் – அரை டப்பா, சீனி – முக்கால் கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :- பச்சரிசியையும் உளுந்தையும் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து வெண்ணெய் போல் அரைத்தெடுக்கவும் ( குருணை , திப்பி இருந்தால் வெடிக்கும். எனவே நைஸாக அரைப்பது முக்கியம் ) . பால் அல்லது தேங்காய்ப்பாலில் சீனியைச் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். மில்க் மெயிட் என்றால் இரண்டு கப் வெந்நீர் ஊற்றிக் கலந்து வைக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து அரைத்த மாவைச் சீடைக்காய் அளவு உருண்டைகள் செய்து வேகவைக்கவும். சூட்டோடு பாலில் போட்டு ஊறவைத்து நிவேதிக்கவும்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...