எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 டிசம்பர், 2019

29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

தேவையானவை :- சுண்டைக்காய் – 1 கப், பாகற்காய் – 1, சேனை – 1 துண்டு, கிள்ளு பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு – அரை கப், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், தக்காளி – 1, புளி – 1 நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 1இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.
செய்முறை:-  சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி நீரில் போடவும். பாகற்காயை விதையில்லாமல் பொடியாக நறுக்கவும். சேனைக்கிழங்கை ஒரு இஞ்ச் துண்டுகள் செய்து எண்ணெயில் வதக்கி வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சுண்டைக்காயையும் பாகற்காயையும் போட்டு நன்கு வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்கும்போது பருப்பையும் வெந்த சேனையையும் சேர்க்கவும். மூடி போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் வெல்லம் போட்டு இறக்கி நிவேதிக்கவும்.
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...