எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

இனிப்பு பூந்தி.

இனிப்பு பூந்தி.






தேவையானவை:- கடலை மாவு -1 கப், சீனி - 1 கப், சோடாப்பூ - 1 சிட்டிகை, ஏலப்பொடி - 1 சிட்டிகை, பச்சைக்கற்பூரம் - 1 சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 10. உப்பு - 1 சிட்டிகை, கிராம்பு - 4. ( கல்கண்டு, கிஸ்மிஸ் - விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் ) , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை:- சீனியில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கம்பிப் பாகு வைத்துக் கொள்ளவும். இதில் முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுப் பச்சைக்கற்பூரம்,  ஏலப்போடி, கிராம்பைப் போட்டு வைக்கவும்.  

கடலைமாவில் உப்பு, சோடாப்பூ போட்டுப் பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பூந்தி பொரிக்கும் ஜாரிணியில் மாவைக் கரண்டியால் மோந்து ஊற்றி அதே கரண்டியால் தேய்க்கவும். முத்து முத்தாக எண்ணெயில் பூந்தி விழுந்ததும் இன்னொரு அரிகரண்டியால்  அனைத்தையும் திருப்பி விடவும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு சலசலப்பு அடங்கியதும் அனைத்தையும் வடித்து வடிகட்டியில் போடவும். பூந்தியைத் தொட்டுப் பார்த்தால் சொடுக் கென்று உடையவேண்டும். மொறுக் கென்று இருக்கக் கூடாது ( நொறுங்கக் கூடாது ) . சதக் என்றும் இருக்கக் கூடாது.  

இதை சீனிப் பாகில் போட்டுப் புரட்டி விடவும். மிச்ச பூந்திகளையும் இவ்வாறே பொரித்துப் போட்டுப் பாகில் புரட்டிக் கால்மணி நேரம் வைக்கவும். அதன்பின் இதைப் பரிமாறவும். 
 

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

உப்புப் புளி ரசம்.

உப்புப் புளி ரசம். 


தேவையானவை :- சின்ன வெங்காயம் - 15, வரமிளகாய் - 4, கருவேப்பிலை -  1 இணுக்கு, தண்ணீர் - 2 கப், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, சீரகம் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:- புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். இதில் பெருங்காயத்தூள், சீரகத்தை உள்ளங்கையில் கசக்கிச் சேர்க்கவும். வரமிளகாயை விதை நீக்கிக் கிள்ளிப் போடவும். கருவேப்பிலையையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும். சின்ன வெங்காயத்தை உரித்து நைஸாக அரிந்து போடவும்.எல்லாவற்றையும் சேர்த்துக் கையால் பிசைந்து விடவும். இரு நிமிடங்கள் வைத்திருந்து சூடான இட்லிகளுடன் அல்லது தோசைகளுடன் பரிமாறவும். 

Related Posts Plugin for WordPress, Blogger...