குறுவை அரிசிப் பாயாசம்
தேவையானவை:- குறுவை அரிசி - அரை ஆழாக்கு, பால் - 1 லிட்டர், ஜீனி - 1/2 ஆழாக்கு, ஏலக்காய் – 2, முந்திரி - 10, கிஸ்மிஸ் – 10, நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:குறுவை அரிசியை மிக்ஸி
குறுவை அரிசிப் பாயாசம்
தேவையானவை:- குறுவை அரிசி - அரை ஆழாக்கு, பால் - 1 லிட்டர், ஜீனி - 1/2 ஆழாக்கு, ஏலக்காய் – 2, முந்திரி - 10, கிஸ்மிஸ் – 10, நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:குறுவை அரிசியை மிக்ஸி
கல்கண்டு வடை
தேவையானவை:- உளுந்து - 1 கப், கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - பொறிக்க.
செய்முறை:- உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.
முறுக்கு வடை
தேவையானவை :- பச்சரிசி - 4 கப், வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப், உப்பு - 1 2 டீஸ்பூன், , எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு, வெண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:- பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும். வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பிப் பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்துத் தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஒரு கை
தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு, சீனி - 1/2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1/ 2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடித்தது)
செய்முறை:- கவுனரிசியைச் சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும். வெளியில் எடுத்து நன்கு மசித்துச் சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். காலைப் பலகாரத்துடன் இனிப்பாக பரிமாறவும்.
நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்
செட்டி நாட்டு உணவின் சிறப்புகள்
இங்கிருக்கும் வீடுகளைப் போல செட்டிநாட்டு உணவுகளும் கட்டுக்கோப்பானவை. உடலுக்கு ஒரு தீங்கும் செய்யாதவை. மசாலா எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தியும் செய்யலாம். முன் காலத்தில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து மஞ்சட்டியில் சமைப்பதால் மிக ருசியாக இருக்கும். இங்கே இன்றும் திருமணப் பலகாரங்கள், எடைவேளைப் பலகாரங்கள் என்பவை பிரசித்தம். தீபாவளி, பிள்ளையார் நோன்பு, திருமணம், விளையாட்டுப் பொட்டி வேவு, சூப்புடி, கார்த்திகைப் புதுமை, திருவாதிரைப் புதுமை போன்றவற்றில் இவ்வுணவு வகைகளைச் செய்து பரிமாறுவார்கள். செட்டிநாட்டார் உணவை செய்வதில் மட்டுமல்ல விருந்தினரை உபசரித்து மகிழ்வதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள்.
தேனம்மைலெக்ஷ்மணன்.
1.இனிப்புக் கவுனியரிசி
2.முறுக்கு வடை
3.மனகோலம்
4.சீப்புச் சீடை
5.கந்தரப்பம்
6.வெள்ளைப் பணியாரம்
7.பால் பணியாரம்
8.மசாலச் சீயம்
9.கருப்பட்டிப் பணியாரம்
10.கும்மாயம்
11.மட்டன் உப்புக்கறி
12.சிக்கன் செட்டிநாடு
13.கேக் முட்டைக் குழம்பு
14.நண்டுக் குழம்பு
15.ராட்டு மசாலை
16.கைமா பொடிமாஸ்
17.வெங்காயக் கோஸ்
18.கத்திரிக்காய் கோஸமல்லி
19.வாழைப்பூக் கோளா
20.இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்
21.வரமிளகாய்த் துவையல்
22.டாங்கர் சட்னி
23.கல்கண்டு வடை
24.குறுவை அரிசிப் பாயாசம்
25.சைவ மீன் குழம்பு