எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஜூன், 2026

வெங்காயக் கோஸ்

வெங்காயக் கோஸ்


தேவையானவை :- பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 1, உருளை – சிறியது – 1, தேங்காய் – 1 மூடிவரமிளகாய் – 10, சோம்பு – அரை டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி – 4, பட்டை – கால் இன்ச் ( விரும்பினால் ), உப்பு – அரை டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்கிராம்பு – 1 ( விரும்பினால் ), கருவேப்பிலை – 1 இணுக்கு

 

செய்முறை:- பெரியவெங்காயத்தைத் தோலுரித்து தயிர்ப் பச்சடிக்கு நறுக்குவது போல் நீளமாக மெல்லிசாக நறுக்கவும்தக்காளியை துண்டுகள் செய்யவும்உருளையைத் தோலுரித்து வெங்காயம் போல் குச்சி குச்சியாக நறுக்கவும். வரமிளகாய்துருவிய தேங்காய்சோம்புசீரகம்பொட்டுக்கடலைமுந்திரி , உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து உளுந்து கிராம்பு பட்டை போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்வெங்காயம் தண்ணி தண்ணியாக வதங்கியதும் உருளைதக்காளியைப் போட்டு வதக்கவும்இரண்டு நிமிடம் கழித்துக் கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுத் திறக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.3 கப் தண்ணீர் சேர்க்கலாம். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

புதன், 17 ஜூன், 2026

சீப்புச் சீடை

சீப்புச் சீடை


தேவையானவை:- பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், தேங்காய் - 1 முழுதாக, உப்பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொறிக்க ( 350 கிராம்)

செய்முறை:- பச்சரிசியைச் சிறி்து நேரம் ஊறவைத்து வடிகட்டியில் போட்டு பின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். வெறும் வாணலியில் போட்டு மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையையும் பொடித்துச் சலிக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சூடாகும்போது உப்பு போட்டு இறக்கவும். திரிந்தது போல் இருக்கும். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது அரிசி., பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக்கட்டையில் உருண்டையாக் உருட்டிப்போட்டு மாவைப் பேப்பரில் பிழியவும். அதை 3 இன்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும்.

ஞாயிறு, 14 ஜூன், 2026

மனகோலம்

மனகோலம்


தேவையானவை:- பாசிப்பருப்பு மாவு - 2 கப், வெல்லம் - 2 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், டால்டா/எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, தேங்காய் - 5 இன்ச் துண்டு, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சீனி பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:- பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக  வறுத்து அரைத்துச் சலிக்கவும். உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மாவு பிசையவும். எண்ணெய் அல்லது டால்டாவைக் காயவைத்து மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து  2 இன்ச் துண்டுகளாக உதிர்த்து வைக்கவும். தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும். மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர்/பித்தளை பேசினில்  போடவும். வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகு தயாரித்து இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்து விடவும். பொடித்த சீனியைத் தூவி ஆறியபின் பரிமாறவும்.

வியாழன், 11 ஜூன், 2026

வரமிளகாய்த் துவையல்

வரமிளகாய்த் துவையல்


தேவையானவை :- வரமிளகாய் 10. பெரிய வெங்காயம் – 1, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 1 பல்தக்காளி – 2, பெருங்காயம் – 1 துண்டுஉப்பு – அரை டீஸ்பூன்புளி – 2 சுளைஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்,  உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை :- பெரிய வெங்காயம் சின்னவெங்காயம்பூண்டைத் தோலுரித்து நறுக்கவும்தக்காளியைத் துண்டுகள் செய்யவும்மிக்ஸியில் வரமிளகாய்பெரிய வெங்காயம்சின்ன வெங்காயம் பூண்டு தக்காளிபெருங்காயம்உப்புபுளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்து தாளித்து கருவேப்பிலை போட்டு மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கிக் கொட்டிக் கலந்து உபயோகிக்கவும்.

ஞாயிறு, 7 ஜூன், 2026

கும்மாயம்

கும்மாயம்


தேவையானவை:- கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும் - 1கப் 200 கி்ராம். கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம். நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம். தண்ணீர் - 4 கப்

செய்முறை:- பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...