கருணைக்கிழங்குக் குழம்பு
தேவையானவை:- கருணைக்கிழங்கு - 250 கி, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப் பூண்டு - 7, தக்காளி - 1, புளி - 1 எலுமிச்சை அளவு, உப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 4 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - 30 மிலி, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.
செய்முறை:- கருணைக்கிழங்குகளை நன்கு கழுவிக் குக்கரில் வேகவைக்கவும். 10 நிமிடம் ஆறியபின் தோலுரித்துத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம்., பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பு சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம்., போடவும். கருவேப்பிலை., சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி கருணைக்கிழங்கை சேர்க்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி ., மிளகாய்ப்பொடி., மல்லிப்பொடி போடவும். நன்கு கொதிக்க வைத்து பின் 10 நிமிடம் மூடிபோட்டு சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.









