எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மே, 2026

பால் பணியாரம்

பால் பணியாரம்


தேவையானவை :- பச்சரிசி  -  1 ஆழாக்குவெள்ளை உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு., உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் -  பொறிக்கத் தேவையான அளவு., காய்ச்சிய பால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 கப்ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-பச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும். 

செவ்வாய், 26 மே, 2026

வெள்ளைப் பணியாரம்

வெள்ளைப் பணியாரம்


தேவையான பொருட்கள்:- பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டிவெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு), உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - பொறிக்க..

செய்முறை:- அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுக்கவும். .அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு மாவை நன்கு அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும்.

வியாழன், 21 மே, 2026

கந்தரப்பம்

கந்தரப்பம்


தேவையானவை:- பச்சரிசி - 2 கப், புழுங்கல் அரிசி - 1/4 கப், உளுந்து - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/8 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவியது - 1 கப், ஏலக்காய் - 4 . , எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

செவ்வாய், 19 மே, 2026

குறுவை அரிசிப் பாயாசம்

குறுவை அரிசிப் பாயாசம்


தேவையானவை:-  குறுவை அரிசி - அரை ஆழாக்குபால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 ஆழாக்குஏலக்காய் – 2, முந்திரி  - 10, கிஸ்மிஸ் – 10, நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:குறுவை அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக்  குக்கரில் அரை லிட்டர் பாலில் வேகவிடவும்வெந்ததும் இறக்கி மிச்ச பாலையும் சேர்த்து ஜீனி கரையும் வரை காய்ச்சி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொறித்துப் போட்டு ஏலத்தைப் பொடி செய்து போட்டுப் பரிமாறவும்.

சனி, 16 மே, 2026

கல்கண்டு வடை

கல்கண்டு வடை


தேவையானவை:- உளுந்து - 1 கப்,  கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்,  உப்பு - 1 சிட்டிகை,  எண்ணெய் - பொறிக்க.

செய்முறை:- உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...