எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு

மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு


தேவையானவை:- மாங்கொட்டைப் பருப்பு – 2 (மாங்காய் கொட்டையை உரித்து காயவைத்த பருப்பு) , சின்ன வெங்காயம் – 10 உரித்து பொடியாக நறுக்கவும்வெள்ளைப்பூண்டு – 8 உரித்துப்பொடியாக நறுக்கவும்தக்காளி – 1 பொடியாக நறுக்கவும்புளி – 1 நெல்லி அளவுஉப்பு – 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி – 1 சிட்டிகைசாம்பார் பொடி – 2 டீஸ்பூன் அல்லது மிளகாய் – 6 மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு சீரகம் து.பருப்பு தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைக்கவும்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்வெந்தயம் – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- மாங்கொட்டைப் பருப்பை வெந்நீரில் ஊறப்போடவும். புளியையும் உப்பையும் ஊறவைத்து 3 கப் சாறெடுத்து சாம்பார் பொடி அல்லது அரைத்த மசாலா பொடிபோட்டுக் கரைத்து வைக்கவும். மாங்கொட்டைப் பருப்பை நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து வெந்தயம் போட்டுச் சிவந்ததும் வெங்காயம் வெள்ளைப்பூண்டு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதங்கியதும் அரைத்த மாங்கொட்டைப் பருப்பு விழுதைப் போடவும். அரை நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி போட்டு மசாலாப்பொடியோடு கரைத்து வைத்த புளியை ஊற்றவும். கொதிவந்ததும் அடக்கி சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

சனி, 11 ஏப்ரல், 2026

கறிவடகக் குழம்பு

கறிவடகக் குழம்பு


தேவையானவை:- கறிவடகம் - 20, சின்ன வெங்காயம் - 10வெள்ளைப்பூண்டு - 5தக்காளி - 1புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைதேங்காய்த் துருவல் –கால் கப்,  எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். 2 கப் நீரில் புளியை ஊறவைத்துச் சாறெடுத்து அதில் உப்புமிளகாய்த்தூள்மஞ்சள்தூள் மல்லித்தூள் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு வெந்தயம் சீரகம் போட்டுத் தாளித்துக் கறிவடகம் கருவேப்பிலையை வறுக்கவும். வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டுப் பெருங்காயப் பொடியைத் தூவி வறுத்து அதில் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காயை அரைத்துச் சேர்த்து சிம்மில் வைத்து இறக்கவும்.

புதன், 8 ஏப்ரல், 2026

சும்மா குழம்பு

சும்மா குழம்பு


தேவையானவை:- சின்ன வெங்காயம் - 10தக்காளி - 1பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்,  பூண்டு - 2 பல்புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைகருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து வட்டமாக நைசாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் சோம்பு, வெந்தயம் போடவும். அதில் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போடவும். 2 நிமிடம் வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றவும். பொங்கி நுரைத்து வரும்போது இறக்கி சூடாக இட்லி அல்லது சாதத்தோடு பரிமாறவும்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

பாசிப்பயறுக் குழம்பு

பாசிப்பயறுக் குழம்பு


தேவையானவை:- பாசிப்பயறு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், புளி - இரண்டு சுளை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம்  - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை. பூண்டு - ஒரு பல். 

செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில்  வேகவிடவும். வெந்த பயரில் வெங்காயம் தக்காளியை அரிந்து போட்டு உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், சாம்பார் தூள் போடவும். ஐந்து நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துப் பூண்டைத் தட்டிப்போட்டு இறக்கவும்.

வியாழன், 2 ஏப்ரல், 2026

வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு

வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு


தேவையானவை:- சின்ன வெங்காயம் - 50 கி, வெள்ளைப்பூண்டு - 50 கி, தக்காளி - 1 பெரியது, சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, உப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்கத்தேவையான அளவு 1 டேபிள்ஸ்பூன் இருக்கலாம், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு துண்டு, சீரகம் -1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், சோம்பு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 இணுக்கு, தண்ணீர் - 3 கப்

 

செய்முறை:- வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும்., பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும்., உளுந்து., சீரகம்., சோம்பு.,வெந்தயம் போட்டுப் பொன்னிறமானதும்., சுத்தம் செய்து இரண்டாக நறுக்கப்பட்ட வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். சாம்பார்பொடி., மஞ்சள் பொடி போட்டு உப்பும் புளியும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்கு கொதித்து வந்தவுடன்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்..10 நிமிடம் கழித்துப் பூண்டு வெந்திருக்கிறதா எனப் பார்த்து இறக்கவும். இந்தக் குழம்பும் அப்பளமும் சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...