எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2026

வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு

வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு


தேவையானவை:- வாழைக்காய் – 1, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப்பூண்டு – 4, தக்காளி – 1, நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 2 இணுக்கு, புளி – 1 நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன். மஞ்சள் பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 டீஸ்பூன்.

 

செய்முறை:- வாழைக்காயைத் தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கித் தண்ணீரில் போடவும். வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து குறுக்குவாட்டில் வெட்டவும். தக்காளியைக் கழுவி வெட்டி வைக்கவும்.

 

ஒரு கடாயில் உப்புப் புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, கருவேப்பிலை, பெருங்காயம், சீரகம், வெந்தயம், பூண்டு வெங்காயம், தக்காளி, வாழைக்காயைப் போட்டு ஒரு கரண்டியால் நன்கு கலக்கிவிட்டு அடுப்பில் ஏற்றவும். கொதி வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து மூடிபோட்டு வேகவைத்து இறக்கவும். தாளிக்க வேண்டாம்.

வியாழன், 26 மார்ச், 2026

கத்திரி வத்தல் மாவற்றல் அவரை வற்றல் மொச்சைக் குழம்பு

கத்திரி வத்தல் மாவற்றல் அவரை வற்றல் மொச்சைக் குழம்பு


தேவையானவை:- மொச்சை - 1 கப், மாங்காய் வற்றல் - 10, கத்திரி வத்தல் - 8, அவரை வத்தல் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை. , புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- மொச்சையை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்.,கத்திரி வற்றல், அவரை வற்றல்,  தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

திங்கள், 23 மார்ச், 2026

சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு

சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு


தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோசின்ன வெங்காயம் – 8, வரமிளகாய் - 5வரமல்லி – 2 டீஸ்பூன்சீரகம்மிளகு – தலா ஒரு டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – அரை மூடிதேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்உப்பு - டீஸ்பூன்கடுகுவெந்தயம் – தலா அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- சேனைக்கிழங்கைத் தோல் சீவிக் கால் இஞ்ச் அளவு சதுரத் துண்டுகளாக வெட்டவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி வேக விடவும்முக்கால் பதம் வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய்வரமல்லிமிளகுசீரகம்தேங்காயை வதக்கி அரைத்து சின்ன வெங்காயத்துடன் சேனைக்கிழங்கில் போட்டு அரை கப் நீரூற்றி வேக விடவும்வெந்ததும் உப்பு சேர்த்து எண்ணெயில் கடுகுவெந்தயம்கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்

வெள்ளி, 20 மார்ச், 2026

புடலங்காய் பொரிச்ச குழம்பு

புடலங்காய் பொரிச்ச குழம்பு


தேவையானவை:- புடலங்காய் -1, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 5, சீரகம் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 2 டேபிள்தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

 

 

செய்முறை:- புடலங்காயை விதை நீக்கிக் கட்டம் கட்டமாக வெட்டவும்சின்னவெங்காயத்தையும் சிறிதாக வெட்டவும்ப்ரஷர் பானில் ஒரு கைப்பிடி பாசிப்பருப்புப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம் , புடலங்காய் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் பச்சை மிளகாய்சீரகம், தேங்காய்த் துருவலை வதக்கி அரைத்து உப்போடு சேர்த்துப் புடலங்காயில் கொட்டி ஒரு கொதி வேகவிடவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

செவ்வாய், 17 மார்ச், 2026

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு


தேவையானவை:- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப், மாங்காய் வற்றல் - 10, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- தட்டைப்பயறை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தைச் சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மில் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...