எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 மார்ச், 2026

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு


தேவையானவை:- மிளகு – அரை டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சரிசி – கால் டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் டேபிள் ஸ்பூன், சின்னவெங்காயம் – 15. உரித்துப் பொடியாக அரியவும். பூண்டு – 10 இதழ் உரித்துப் பொடியாக அரியவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- மிளகு சீரகம், பொட்டுக்கடலை பச்சரிசியைத் தனித்தனியாக கடாயில் போட்டு வெதுப்பிக் கொள்ளவும். இதை மிக்ஸியில்  நன்கு பவுடராகப் பொடித்து வைக்கவும். உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து இந்தப் பொடியைப் போட்டு வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் பூண்டு தக்காளியை சிறுதீயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதில் உப்புப்புளியில் கரைத்த மிளகு விழுதைக் கொட்டி எண்ணெய் பிரியும்வரை வேக வைத்து இறக்கவும்.

புதன், 11 மார்ச், 2026

பூசணிக்காய் மோர்க்குழம்பு

பூசணிக்காய் மோர்க்குழம்பு


தேவையானவை:- பூசணிக்காய் – 1தயிர் – அரை லிட்டர் பாலை உறைய வைக்கவும். , தேங்காய் – பாதி துருவவும்பச்சைமிளகாய் – 4சீரகம் – அரை டீஸ்பூன்துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா 1 டீஸ்பூன் ஊறவைக்கவும்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைஉப்பு – 1 டீஸ்பூன்தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்வெந்தயம் – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- பூசணிக்காயைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத்தில் நீளமாக நறுக்கி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் வதக்கி மஞ்சள் பொடி போட்டு அரை கப் நீரூற்றி வேகவிடவும். தயிரைக் கடைந்து வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பு பச்சரிசியைப் பச்சைமிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலோடு சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பூசணிக்காயில் ஊற்றவும். லேசாக மேலே நுரைத்து வரும்போது உப்பு சேர்த்துக் கடைந்த தயிரை ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

ஞாயிறு, 8 மார்ச், 2026

கருவேப்பிலைக் குழம்பு

கருவேப்பிலைக் குழம்பு


தேவையானவை:- இளம் கருவேப்பிலை - 1 கிண்ணம், சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, தக்காளி - 1, புளி - 1 எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, சோம்பு - 1/2 டீஸ்பூன், ஜீரகம் - 1/4 டீஸ்பூன், மிளகு - 5, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

 

செய்முறை:- கருவேப்பிலையைக் கழுவி அதோடு சோம்பு, சீரகம், மிளகு, மல்லிப் பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, புளி போட்டு நன்கு மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பின் வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போடவும். நன்கு வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றித் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சூடாக சாதம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

வியாழன், 5 மார்ச், 2026

25 வகை குழம்புகள் குமுதம் சிநேகிதியில்

 25 வகைக் குழம்புகளின் முன்னுரை:-


தமிழர் உணவில் அரிசிச் சோறும் குழம்பும் இன்றியமையாதன. பருப்புப் போட்டு வைக்கும் சாம்பார் ஒருவித ருசி என்றால் புளிக் குழம்புகளும் அரைத்துவிட்ட குழம்புகளும் இன்னொரு வித ருசி. வெளிநாட்டினர் விதம் விதமான சாஸ்களைக் கொண்டும் சீனர்கள் சோயா சாஸ் சில்லி சாஸ் கொண்டும் உணவு தயாரிப்பார்கள். நாம் புளி தேங்காய்பொடிகள் கொண்டு செய்யும் இவ்வகைக் குழம்புகள்


 சாதம்உப்புமாஇட்லிகிச்சடிதோசைஊத்தப்பம்பணியாரம்பொங்கல் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். புளி இரும்புச் சத்து கொடுக்கும். பெருங்காயம் சீரகம் பூண்டு போன்றவை ஜீரணத்தைத் தூண்டும். எனவே இவ்வகைக் குழம்புகள் தயாரித்து வழங்கிக் குடும்பத்தினரின் பாராட்டுக்களைப் பெறுங்கள்.

அன்புடன்
தேனம்மைலெ
க்ஷ்மணன்.

திங்கள், 2 மார்ச், 2026

பின்னி (உளுந்தமாவுக் கேசரி)

பின்னி (உளுந்தமாவுக் கேசரி)



தேவையானவை:- வெள்ளை உருண்டை உளுந்து - 2 கப், வெள்ளை ரவை - கால் கப், கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மாவா ( இனிப்பில்லாத கோவா ) - ஒன்றரை கப், நெய் - ஒன்றரைகப், பால் - அரை கப், சீனி - 2 கப் , ,ஊறவைத்துத் தோலுரித்து குச்சியாகப் பொடித்த பாதாம் - கால் கப். சூர்யகாந்தி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன். உடைத்த பிஸ்தா - 1 டீஸ்பூன். ஏலப் பொடி - அரை டீஸ்பூன்.

செய்முறை :-வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது சிறிதாக அரை கப் பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பானில் பாதி நெய்யைக் காயவைத்து ரவையையும் அதன் பின் கோதுமை மாவையும் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை நிதானமான தீயில் வறுக்கவும். இதில் மாவாவைப் போட்டு லேசாகச் சிவந்து வரும்வரை கிளறவும். இதில் அரைத்த உளுந்து விழுதையும் போட்டுக் கிளறவும். நிதானமான தீயில் 30 நிமிடம் கிளறியதும் மாவு உருண்டு வரும்போது மிச்ச நெய்யைச் சேர்க்கவும். தொடர்ந்து கிளற மாவு பொன்னிறமாக உதிர்ந்து நன்கு வாசனை வரத் தொடங்கும். அதில் ஏலப்பொடியையும் சீனியையும் சேர்த்துக் கிளறவும். குச்சியாக நறுக்கிய பாதாமையும் மேலே சூரிய காந்தி விதைகளையும் பொடித்த பிஸ்தாவும் தூவி பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...