எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 ஜூன், 2026

வரமிளகாய்த் துவையல்

வரமிளகாய்த் துவையல்


தேவையானவை :- வரமிளகாய் 10. பெரிய வெங்காயம் – 1, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 1 பல்தக்காளி – 2, பெருங்காயம் – 1 துண்டுஉப்பு – அரை டீஸ்பூன்புளி – 2 சுளைஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்,  உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை :- பெரிய வெங்காயம் சின்னவெங்காயம்பூண்டைத் தோலுரித்து நறுக்கவும்தக்காளியைத் துண்டுகள் செய்யவும்மிக்ஸியில் வரமிளகாய்பெரிய வெங்காயம்சின்ன வெங்காயம் பூண்டு தக்காளிபெருங்காயம்உப்புபுளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்து தாளித்து கருவேப்பிலை போட்டு மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கிக் கொட்டிக் கலந்து உபயோகிக்கவும்.

ஞாயிறு, 7 ஜூன், 2026

கும்மாயம்

கும்மாயம்


தேவையானவை:- கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும் - 1கப் 200 கி்ராம். கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம். நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம். தண்ணீர் - 4 கப்

செய்முறை:- பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.

வியாழன், 4 ஜூன், 2026

கருப்பட்டிப் பணியாரம்

கருப்பட்டிப் பணியாரம்


தேவையானவை:- பச்சரிசி -2 கப், வெல்லம் + கருப்பட்டி - 200 கி, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம்  ஊறவைத்து வடிகட்டி நிழலில் போடவும். பத்து நிமிடம் கழித்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். ஒரு கட்டி வெல்லத்தோடு கருப்பட்டியையு நைத்துப் போட்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றிக் கரைய விடவும். வெல்லமும் கருப்பட்டியும் கரைந்ததும் மாவில் வடிகட்டி ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி நன்கு பிசைந்து உருட்டி வைக்கவும்.  மறுநாள் எண்ணெயைக் காயவைத்து மாவைக் கரைத்துப் பணியாரங்களாக ஊற்றவும். எண்ணையோடு சிறிது நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஊற்றினால் மிகவும் ருசியாக  இருக்கும். 

செவ்வாய், 2 ஜூன், 2026

மசாலச் சீயம்

மசாலச் சீயம்


தேவையானவை:- பச்சரிசி -  1 ஆழாக்குவெள்ளை உளுந்தம்பருப்பு - 1 ஆழாக்குஉப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவுதேங்காய்  -  1 மூடி துருவியதுசின்ன வெங்காயம் - 20 தோலுரித்துப் பொடியாக நறுக்கவும், கடுகு - 1 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 கொத்துபச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்.


செய்முறை:- பச்சரிசி, உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு பானில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி மாவில் போட்டு நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 29 மே, 2026

பால் பணியாரம்

பால் பணியாரம்


தேவையானவை :- பச்சரிசி  -  1 ஆழாக்குவெள்ளை உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு., உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் -  பொறிக்கத் தேவையான அளவு., காய்ச்சிய பால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 கப்ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-பச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...