எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 மே, 2026

20 வகை செட்டிநாட்டு உணவுகள்

நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்


செட்டி நாட்டு உணவின் சிறப்புகள்



இங்கிருக்கும் வீடுகளைப் போல செட்டிநாட்டு உணவுகளும் கட்டுக்கோப்பானவை. உடலுக்கு ஒரு தீங்கும் செய்யாதவை. மசாலா எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தியும் செய்யலாம். முன் காலத்தில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து மஞ்சட்டியில் சமைப்பதால் மிக ருசியாக இருக்கும். இங்கே இன்றும் திருமணப் பலகாரங்கள்எடைவேளைப் பலகாரங்கள் என்பவை பிரசித்தம். தீபாவளிபிள்ளையார் நோன்புதிருமணம்விளையாட்டுப் பொட்டி வேவுசூப்புடிகார்த்திகைப் புதுமைதிருவாதிரைப் புதுமை போன்றவற்றில் இவ்வுணவு வகைகளைச் செய்து பரிமாறுவார்கள். செட்டிநாட்டார் உணவை செய்வதில் மட்டுமல்ல விருந்தினரை உபசரித்து மகிழ்வதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள்.

தேனம்மைலெக்ஷ்மணன்.



1.இனிப்புக் கவுனியரிசி
2.முறுக்கு வடை
3.மனகோலம்
4.சீப்புச் சீடை
5.கந்தரப்பம்
6.வெள்ளைப் பணியாரம்
7.பால் பணியாரம்
8.மசாலச் சீயம்
9.கருப்பட்டிப் பணியாரம்
10.கும்மாயம்
11.மட்டன் உப்புக்கறி
12.சிக்கன் செட்டிநாடு
13.கேக் முட்டைக் குழம்பு
14.நண்டுக் குழம்பு
15.ராட்டு மசாலை
16.கைமா பொடிமாஸ்
17.வெங்காயக் கோஸ்
18.கத்திரிக்காய் கோஸமல்லி
19.வாழைப்பூக் கோளா
20.இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்
21.வரமிளகாய்த் துவையல்
22.டாங்கர் சட்னி
23.கல்கண்டு வடை
24.குறுவை அரிசிப் பாயாசம்
25.சைவ மீன் குழம்பு

செவ்வாய், 5 மே, 2026

கருணைக்கிழங்குக் குழம்பு

கருணைக்கிழங்குக் குழம்பு



தேவையானவை:- கருணைக்கிழங்கு - 250 கிசின்ன வெங்காயம் - 10வெள்ளைப் பூண்டு - 7தக்காளி - 1புளி - 1 எலுமிச்சை அளவுஉப்பு - 2 டீஸ்பூன்மஞ்சள்பொடி - 1 சிட்டிகைமிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்மல்லிப்பொடி - 4 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குஎண்ணெய் - 30 மிலிகடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.

 

செய்முறை:- கருணைக்கிழங்குகளை நன்கு கழுவிக் குக்கரில் வேகவைக்கவும். 10 நிமிடம் ஆறியபின் தோலுரித்துத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம்., பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பு சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம்., போடவும். கருவேப்பிலை., சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி கருணைக்கிழங்கை சேர்க்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி ., மிளகாய்ப்பொடி., மல்லிப்பொடி போடவும். நன்கு கொதிக்க வைத்து பின் 10 நிமிடம் மூடிபோட்டு சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

சனி, 2 மே, 2026

சுண்டைக்காய் புளிக்குழம்பு

சுண்டைக்காய் புளிக்குழம்பு



 

தேவையானவை :- சுண்டைக்காய் - 1 கப்சின்ன வெங்காயம் - 10

வெள்ளைப்பூண்டு - 6 பல்தக்காளி - 1புளி - 1 எலுமிச்சை அளவுஉப்பு - 2 டீஸ்பூன். , மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்மஞ்சப் பொடி - 1 சிட்டிகைபெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டுகருவேப்பிலை - 1 இணுக்குகடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்சீனி - 1 சிட்டிகை. , எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியையும்., உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறப் போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, சுண்டைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி போடவும். நன்கு கொதி வந்தவுடன் சீனி சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.

திங்கள், 27 ஏப்ரல், 2026

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு



தேவையானவை:- சின்னக் கத்திரிக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் - 2 இன்ச் துண்டு, வரமிளகாய் - 6, மல்லி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 1, உப்பு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க :- கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. 

 

செய்முறை:- கத்திரிக்காய்களை முழுதாக மேலும் கீழும் கீறித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீரில் ஊறப்போடவும். தேங்காயைத் துருவி அத்துடன் வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, ஊறிய பருப்புகள் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அதில் கத்திரிக்காயையும் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். உப்புப் புளியை ஒரு டம்ளர் நீரில் நன்கு கரைத்து ஊற்றி மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். வெந்து கொதிக்கும் போது அரைத்த மசாலாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். மசாலா வாடை போக வெந்து குழம்பு நல்ல மணம் வரும்போது இறக்கவும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

மீல்மேக்கர் குழம்பு

மீல்மேக்கர் குழம்பு



தேவையானவை:- மீல் மேக்கர் – ஒரு கைப்பிடிபெரிய வெங்காயம் - 1தக்காளி - 1புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்அரைக்க:- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்சோம்புகசகசா – தலா அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம், பூண்டு – தலா 2கடுகு - 1 டீஸ்பூன்சோம்பு - 1/2 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குகொத்துமல்லி – பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி.

செய்முறை:- மீல்மேக்கரில் வெந்நீர் ஊற்றி நன்கு பிழிந்து இரண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்புமஞ்சள்தூள்மல்லித்தூள்மிளகாய்த்தூள் போட்டு வைக்கவும். தேங்காய் சோம்பு கசகசா பூண்டு வெங்காயத்தை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சோம்பு தாளித்துப் பெரிய வெங்காயம்தக்காளிகருவேப்பிலைமீல்மேக்கர் போட்டு வதக்கவும். இதில் புளிக்கரைத்த தண்ணீரை மசாலாப் பொடிகளோடு போட்டுக் கொதிக்க விடவும். தேங்காய் மசாலாவைச் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டுக் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...