பருப்புப் பொங்கல்
தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1 கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு, சீரகம், மிளகு தலா 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 20, இஞ்சி – 2 இஞ்ச் துண்டு, பச்சைமிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சீரகம் போட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உப்புப் போட்டு மசிக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் உளுந்து, மிளகு சீரகத்தைத் தாளித்து முந்திரிப் பருப்பையும், கருவேப்பிலையையும் போட்டு பெருங்காயத்தூள் தூவிப் பொரிந்ததும் பருப்புப் பொங்கலில் கொட்டிக் கிளறிவிட்டு நெய்யைக் காய்ச்சி மேலே ஊற்றி நிவேதிக்கவும்.