எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 ஜூலை, 2026

ஓலைக் கொழுக்கட்டை

ஓலைக் கொழுக்கட்டை


தேவையானவை :- பனை ஓலைக்குருத்து – ஒரு அடி நீளமும் மூன்று அங்குல அகலமும் உள்ளது =10. பச்சரிசிமாவு – 2 கப், வேகவைத்த காராமணி- 1 கைப்பிடி , கருப்பட்டி – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – ஒரு மூடி. உப்பு – 1 சிட்டிகை. ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பனைஓலைக் குருத்துகளை நீரில் நனைத்து வைக்கவும். பச்சரிசி மாவில் உப்பு, ஏலப்பொடி, வேகவைத்த காராமணி , தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலந்து கருப்பட்டியை நீரில் இளம்பாகுவைத்து கெட்டியாக ஊற்றி மாவை நன்கு பிசையவும். ஒரு ஓலையை எடுத்து அதில் நீளவாக்கில் கொழுக்கட்டை மாவை வைத்து இன்னொரு ஓலையால் மூடவும். இதேபோல் மீதி மாவையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

ஞாயிறு, 26 ஜூலை, 2026

சுக்கு மல்லிக் கருப்பட்டிக் காப்பி

சுக்கு மல்லிக் கருப்பட்டிக் காப்பி


தேவையானவை:- சுக்கு – 1 இஞ்ச் துண்டு, மல்லி – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, மிளகு – 1 டீஸ்பூன், கருப்பட்டி – 50 கிராம் துருவியது. தண்ணீர் – 2 கப்.

செய்முறை:- சின்ன மிக்ஸி ஜாரில் நைத்த சுக்கு மல்லி, ஏலக்காய், மிளகு போட்டு ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் இந்தப் பொடியைப் போடவும். நன்கு கொதிக்கும்போது துருவிய கருப்பட்டியைச் சேர்த்துக் கரைந்ததும் வடிகட்டி அருந்தவும்.

வியாழன், 23 ஜூலை, 2026

அஞ்சுமாக் கொழுக்கட்டை

அஞ்சுமாக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – கால் கப், புழுங்கரிசி மாவு – கால் கப், சிவப்பரிசி மாவு – கால் கப் , கவுனரிசி மாவு – கால் கப் , கோதுமை மாவு – கால் கப் , துருவிய தேங்காய் – அரை கப், வெல்லம்+ பனங் கருப்பட்டி – 150 கிராம். ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, வெந்நீர் – ஒண்ணேகால் கப். வறுத்த எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் பானில் மணல்போல வறுத்து ஒரு பௌலில் கொட்டவும். வெல்லத்தையும் கருப்பட்டியையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு இளம்பாகு வைத்து கரைத்து வடிகட்டவும். தேங்காய்த் துருவல் உப்பு ஏலப்பொடி எள் போட்டு மாவில் நன்கு கலந்து வெல்லக்கருப்பட்டிப் பாகு ஊற்றி நன்கு கிளறவும். மாவை நன்கு பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

திங்கள், 20 ஜூலை, 2026

பனங்கற்கண்டுப் பால்

பனங்கற்கண்டுப் பால்


தேவையானவை:- பால் - ஒரு லிட்டர். பனங்கற்கண்டு - 100 கி. 

செய்முறை:- பாலைக் காய்ச்சிப் பொங்கும் போது அடக்கி வைத்துப் பனங்கல்கண்டைப் போடவும். கரண்டியால் கிண்டி நன்கு கரைந்ததும் வடிகட்டிக் கொடுக்கவும். இது பத்துப் பேருக்குக் கொடுக்கப் போதுமானது. தொண்டைக் கட்டு நீங்க இதை அருந்தக் கொடுப்பது வழக்கம். பால் அதிக திக்காக இருந்தால் சரிக்குச் சரி நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளி, 17 ஜூலை, 2026

பாற்சோறு

பாற்சோறு


தேவையானவை :- பச்சரிசி -  1 கப், வெல்லம்+கருப்பட்டி - 2 கப், தேங்காய்  ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்., தண்ணீர் - 4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப  அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி  கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும்  தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும். இது 2 நாளைக்கு கெடாது. சூடாகவோ , குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...