எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2026

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு



தேவையானவை:- சின்னக் கத்திரிக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் - 2 இன்ச் துண்டு, வரமிளகாய் - 6, மல்லி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 1, உப்பு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க :- கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. 

 

செய்முறை:- கத்திரிக்காய்களை முழுதாக மேலும் கீழும் கீறித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீரில் ஊறப்போடவும். தேங்காயைத் துருவி அத்துடன் வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, ஊறிய பருப்புகள் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அதில் கத்திரிக்காயையும் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். உப்புப் புளியை ஒரு டம்ளர் நீரில் நன்கு கரைத்து ஊற்றி மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். வெந்து கொதிக்கும் போது அரைத்த மசாலாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். மசாலா வாடை போக வெந்து குழம்பு நல்ல மணம் வரும்போது இறக்கவும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

மீல்மேக்கர் குழம்பு

மீல்மேக்கர் குழம்பு



தேவையானவை:- மீல் மேக்கர் – ஒரு கைப்பிடிபெரிய வெங்காயம் - 1தக்காளி - 1புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்அரைக்க:- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்சோம்புகசகசா – தலா அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம், பூண்டு – தலா 2கடுகு - 1 டீஸ்பூன்சோம்பு - 1/2 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குகொத்துமல்லி – பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி.

செய்முறை:- மீல்மேக்கரில் வெந்நீர் ஊற்றி நன்கு பிழிந்து இரண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்புமஞ்சள்தூள்மல்லித்தூள்மிளகாய்த்தூள் போட்டு வைக்கவும். தேங்காய் சோம்பு கசகசா பூண்டு வெங்காயத்தை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சோம்பு தாளித்துப் பெரிய வெங்காயம்தக்காளிகருவேப்பிலைமீல்மேக்கர் போட்டு வதக்கவும். இதில் புளிக்கரைத்த தண்ணீரை மசாலாப் பொடிகளோடு போட்டுக் கொதிக்க விடவும். தேங்காய் மசாலாவைச் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டுக் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

வியாழன், 23 ஏப்ரல், 2026

பீன்ஸ் தண்ணிக் குழம்பு

பீன்ஸ் தண்ணிக் குழம்பு



தேவையானவை:- பீன்ஸ் - 200 கிபெரிய வெங்காயம் - 1தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த துவரம் பருப்புபுளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஎண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்பெருங்காயப் பொடி - 1 சிட்டிகைவரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்கருவேப்பிலை - 1 இணுக்குகொத்துமல்லி - 1/2 கட்டு.



செய்முறை:- பீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். பெரிய  வெங்காயத்தைத்  தோலுரித்து நீளமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும். ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு, பீன்ஸ், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும். ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திங்கள், 20 ஏப்ரல், 2026

அவரைக்காய் இளங்குழம்பு

அவரைக்காய் இளங்குழம்பு



தேவையானவை:- அவரைக்காய் – 150 கிராம்பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1பூண்டு- 2 பல்துவரம் பருப்பு – கால் கப்பெருங்காயம் – 1 சிறுதுண்டுபுளி – நெல்லி அளவுஉப்பு – ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள் – அரை  டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 1 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்சோம்பு – கால் டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு கொழுந்தாககொத்துமல்லி – 1 கைப்பிடி

 

செய்முறை:- துவரம் பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியைக் கழுவி நீளவாக்கில் நறுக்கவும். அவரைக்காயை நரம்பு எடுத்து இரண்டாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து நைத்து வைக்கவும். பச்சை மிளகாயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து வைக்கவும். கொத்துமல்லியைச் சுத்தம் செய்து கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். 8 கப் தண்ணீரில் அவரைக்காய் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை வேகப்போடவும். பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடி போட்டு உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். பருப்பை மசித்துச் சேர்த்துக் கொதித்ததும் இறக்குமுன் கொத்துமல்லியும் தட்டிய பூண்டும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு சீரகம் சோம்பு கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தக்காளிக் குழம்பு

தக்காளிக் குழம்பு



தேவையானவை:- தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 8 பல், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 6 உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க பட்டை கிராம்பு - தலா 2. 

 

செய்முறை:- தக்காளிகளை முழுதாக ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவு நீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் சூடுபடுத்தவும். அப்படியே இறக்கி வைத்து ஆறியதும் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பூண்டை உரித்து வைக்கவும். வரமிளகாய் , சோம்பு, தேங்காயை அரைத்து வைக்கவும். கசகசாவையும் முந்திரிப்பருப்பையும் தனியாக அரைத்து வைக்கவும். தக்காளியைத் தனியாக அரைக்கவும்.  கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு தாளித்துப் பெரிய வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். அதில் உப்புடன் தேங்காய் அரைத்த கலவையைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். சில நிமிடம் கொதித்தபின் கசகசா முந்திரி அரைத்த கலவையைச் சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்த்து கொதித்து  எண்ணெய் பக்கவாட்டில் பிரிய ஆரம்பிக்கும்போது இறக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...