எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஜூலை, 2026

கேக் முட்டைக் குழம்பு

கேக் முட்டைக் குழம்பு


தேவையானவை:- கேக் துண்டுகள் செய்ய:- முட்டை - 6, பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கவும், ஜீரகம் மிளகு பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன்.


செய்முறை:- முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேடவிடவும். அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். ஆறியவுடன் சதுரமாகவோ, டைமண்ட் ஷேப்பிலோ துண்டுகள் செய்யவும்.

குழம்புக்கு :- சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப் பூண்டு - 7, தக்காளி - 2, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( அரைத்தது), எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- ஒரு பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து ஜீரகம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். உப்பு , புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைப் போடவும். இந்தக் கலவையை பானில் ஊற்றி கொதிவரச் செய்யவும். இதில் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைத்துண்டுகளைப் போடவும். 4 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடாக சாதத்தோடு பரிமாறவும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

சைவ மீன் குழம்பு


சைவ மீன் குழம்பு

தேவையானவை :-  கடலை மாவு - அரை கப்,  வாழைக்காய் -1,  எண்ணெய் – 20 மிலி,  பெரிய தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 10, இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது.  புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து,வெந்தயம்தலா அரை டீஸ்பூன்பெருங்காயம் - சிறு துண்டுகருவேப்பிலை - 1 இணுக்குஅரைக்க :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன்சீரகம்,  மிளகு - கால் டீஸ்பூன்உப்பு - கால் டீஸ்பூன்தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல்.


செய்முறை :- வாழைக்காயின் தோல்பகுதியைக் குச்சிகுச்சியாக நீளமாகச் சீவவும். கடலை மாவில் கால் டீஸ்பூன் உப்பு,  மிளகாய்ப்பொடி சேர்த்துத் தோசை மாவுப் பக்குவத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் கடலைமாவைத் தோசையாக ஊற்றி நடுவில் இரண்டு வாழைக்காய்க் குச்சிகளை இரண்டு இஞ்ச் இடைவெளியில் போட்டு மூன்றாகவோ நான்காகவோ மடித்து மடித்து எடுக்கவும். அதை மீன் சைஸில் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியைச் சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெட்டி வறுத்து வைத்த மீன் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். ரொம்பவும் கிளறாமல் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.

வியாழன், 2 ஜூலை, 2026

டாங்கர் சட்னி

டாங்கர் சட்னி


தேவையானவை :- சின்ன வெங்காயம் – 20, வெள்ளைப் பூண்டு – 15, வரமிளகாய் – 6, புளி – ஒரு நெல்லிக்காய் அளவுஉப்பு – அரை டீஸ்பூன்மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்வெல்லம்/சர்க்கரை – கால் டீஸ்பூன்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து நைசாக வட்டமாக அரியவும்வரமிளகாயை விதையில்லாமல் சின்னதாக ஒடித்துக் கொள்ளவும்ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைப் போடவும்லேசாக சிவந்து வாசம் வந்ததும் சின்ன வெங்காயம்வெள்ளைப்பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்உப்பு புளியை அரை கப் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்மிளகாய்ப் பொடியையும் போட்டு நன்கு கொதித்துச் சுண்டி எண்ணெய் பிரியும் போது வெல்லமோ சர்க்கரையோ போட்டு இறக்கவும். 

திங்கள், 29 ஜூன், 2026

இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்

இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்


தேவையானவை:- காரட் - 2பீன்ஸ் - 15உருளைக்கிழங்கு - 2,  (காலிஃப்ளவர் - 6 துண்டு) , (பட்டாணி - 1/2 கப்) , (பனீர்., பேபிகார்ன்., பட்டர் பீன்ஸ்., குடைமிளகாய்., சோயா( மீல்மேக்கர்) விரும்பினால்) , பெரிய வெங்காயம் - 1தக்காளி - 1வெள்ளைப் பூண்டு - 4 பல்உப்பு - 1/2 டீஸ்பூன். அரைக்க:-வரமிளகாய் - 4சோம்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்தேங்காய் - 2இஞ்ச் துண்டுபொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்சின்ன வெங்காயம் - 2பூண்டு - 1 பல். தாளிக்க:- உளுந்து - 1/ டீஸ்பூன்சோம்பு - 1/4 டீஸ்பூன்கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டுபட்டை - 1 இன்ச் துண்டுகருவேப்பிலை - 1 இணுக்கு. , எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:- காய்கறிகளைக் கழுவி தோல் சீவி சதுரங்களாக வெட்டி அரை வேக்காடாய் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம்., தக்காளி பூண்டை உரித்து நறுக்கிக் கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சோம்பு., பட்டை., கல்பாசிப்பூ தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு வதக்கவும். மசாலாவைப் போட்டுப் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு போடவும். வெந்த காய்களைப் போட்டு மசாலா சேரும்வரை கலக்கவும். 10 நிமிடங்கள் சிம்மில் வேகவைத்து இறக்கவும். சாம்பார் சாதம்., தயிர் சாதம்., சப்பாத்தி., புல்காவுடன் பரிமாறவும்.

வெள்ளி, 26 ஜூன், 2026

வாழைப்பூக் கோளா

வாழைப்பூக் கோளா


தேவையானவை:- வாழைப்பூ - ½,  ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்,  பெரிய வெங்காயம் - 1,  சிவப்பு மிளகாய் - 5,  சோம்பு - 1 டீஸ்பூன்,  சீரகம் - 1/2 டீஸ்பூன்,  மிளகு - 5,  தேங்காய் - 2 இன்ச் துண்டு,  எண்ணெய் - 75 மிலி,  கடுகு - 1 டீஸ்பூன்,  உளுந்து - 1 டீஸ்பூன்,  கருவேப்பிலை - 1 இணுக்கு,  உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாகக் கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போடவும். அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு அரைத்த பூவைப் போடவும். பின் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும் . இல்லாவிட்டால் அடிப் பிடிக்கும். 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை கிளறி உதிரியாக வெந்ததும் இறக்கி சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...